உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 115 காட்சி 36] மு. கருணாநிதி (ஆனந்தபுரம் கண்ணாடி மாளிகை [இரவு நேரம்] திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடைபெறுகின்றன. கண்ணாடி மாளிகையின் உச்சியிலே சுகதேவ் நின்று கொண்டு முத்தாயி வருகையை எதிர்பார்த்திருக்கிறான். வாயிற் புறத்தில் குதிரை வண்டி வந்து நிற்கிறது. அதி லிருந்து திருசங்கும், முத்தாயியும் இறங்குகிறார் கள். முத்தாயி மேலே நிற்கும், சுகதேவனைப் பார்க்கவில்லை. அவள் சந்தோஷமுடன் உள்ளே செல்லுகிறாள். கீழே இறங்கி வந்து விட்ட சுகதேவன் அவர்களை கூட த்தில் சந்திக்கிறான். சுகதேவனைக் கண்ட தும் முத்தாயிக்கு தூக்கி வாரிப் போடுகிறது. உலகமே சுழலுகிறது அவளுக்கு ! மயக்கமுற்றுக் கீழே விழுந்து விடுகிறாள். சுகதேவ்: அதற்குள் மாளிகையிலிருந்து என்ன என்ன? திருசங்கு: ஒன்றுமில்லை. உங்களைப்பார்த்த அதிர்ச்சி யில் மயக்கம் வந்துவிட்டது! சந்தோஷத்தால் இருதயம் படபடக்கு மல்லவா தம்பி!- சுகதேவ்: ஆமாம் ஆமாம் எனக்குகூட அப்படித்தான் அடித்துக் கொள்கிறது!- திருசங்கு சரி இப்போது நீங்கள் மேலே போங்கள்!- நான் பிறகு வருகிறேன். சுகதேவ்: மேலே போய்விடுகிறான், பாடிய படியே !- ஆனந்தமாகப்