உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

$6 இரத்தக் கண்ணீர் சுமதி: அதைத்தான் கொண்டுவந்திருக்கிறேன். இதோ, தை தயவுசெய்து அவரிடம் கொடுத்துவிடுங்கள். வேதாளம்: அன்பான பெண்ணே ! நல்ல காரியம் செய் தாய்! முத்தன் சார்பாக உனக்கு என் நன்றி ! இப் போதே போய் அவனை மீட்கிறேன். நீ ஓடிவிடு தை வீட்டு ! (சுமதி போய்விடுகிறாள்.] வேதாளம், பையை அவிழ்த்துப் பார்க் கிறான். நூறு பொன்களிருக்கின்றன. அவன் முகம், மகிழ்ச்சியால் வீங்குகிறது. அந்தப் பையில் ஒரு மடலும் இருக்கிறது. அந்த ஓலையை எடுத்து வேதாளம் படிக்கிறான், தனக்குள்ளாக! அன்பரே ! குறிப்பிட்டபடி நூறு பொன் அனுப்பி யிருக்கிறேன். ஏட்டுச் சுரைக்காய், கரிக்காகாது என்பீர்களே; என்பதற்காக முத்தங்களை நேரில் தருவதாக வைத்திருக்கிறேன். மாலை - நமது சோலை ! இன்று அன்புள்ள, முத்தாயி. வேதாளம், மடலையும், நூறு பொன்களையும் தன் உடையில் மறைத்து வைத்துக்கொண்டு தென்றல் மாளிகையை நோக்கி வருகிறான் ன். தென்றல் மாளிகையிலிருந்து வெற்றிவேலன் புறப்பட்டுவிடுகிறான். வேதாளத்தையும் தன் வண்டியில் ஏறச் சொல்லுகிறான்.