பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


ரவில் உனது மழைப் பொழிவிற்காக நான் காத்திருக்கிறேன் அப்பொழுது திறந்த நெஞ்சத்துடன் அமைதியாக உன்னை வரவேற்பேன்.

-எ

னது அலைகளை நான் ஏற்றுக் கொள்ள முடியாது; என்கிறது கரை ஆற்றிடம்,

'னது அடிச்சுவடுகளை என் நெஞ்சத்தில் தாங்கியிருப்பேன்'.

-ப.ப

ன்பின் உயர்ந்த தீவிரத்தை எனக்கு அளித்திடு வாய். பேசுவதற்கான துணிவு, செய்வதற்கான துணிவு, உன் விருப்பப்படி தொல்லையைத் தாங்கிக் கொள்வதற்கு யாவற்றையும் ஒதுக்கித் தள்ளுவதற்கான அல்லது தனித்து நிற்பதற்கான துணிவு-இவை எனக்கு வேண்டுபவன. உன்னிடம் நான் வேண்டிக் கொள்வதும் இதுதான்.

-நா

காலைப் பொழுதின் மூடிய கண்களிடம் மறையும் இரவின் ஒரு முத்தும் காண விண்மீனில் மின்னுகிறது.

-மின்

ந்தச் சிறிய உலகின் இரைச்சல் கூட, இந்த நாள் எல்லா உலகங்களுடைய அமைதியையும் அமுக்கி விடுகிறது. -ப.பா