பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்பை அனுப்புவாய்

செங்கதிர் வெப்பத்தில் உறங்கிக் கொண்டிருக்கிற மரங்களினடியில் தேங்கிக் கிடக்கிற தண்ணி இருக்கு மிடத்தில் ஒதுங்கியிருக்கிற யாராவது ஒருவரிடம் காதோடு காதாகப் பேச வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

நீர் விடாய் கொண்டுள்ள நிலத்தை வாழ்த்து கிறதும், வீட்டிலுள்ள மண்பாண்டங்களை நிறைக்கிறதுமான மழை போன்று குளிர்ச்சியாகவும் தூய்மையுமாயிருக்கிற அன்பை எனக்கு அனுப்புவாய்.

-க.கொ