பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


கம்பாவம், தனது கர்வக் குறிகளைக் கல்லிலே பொறிக்கின்றது; அன்போ, மனப்பூர்வமாக மலர்களையே தந்து சரணாகதியடைகிறது.

-மி.மி

கிழக்குத் திசையின் அமைதியான, பணிவான பொறுமையான இருட்டின் பின் காலைப்பொழுது விடியக் காத்திருக்கிறது.

-தே

ன் வாழ்நாளில் எத்தனையோ இன்ப நாள்கள் வந்து போயிருக்கிறன்றன. மகிழ்ச்சி வாணர்களுடன் நான் எத்தனையோ இரவுகள் விழாக்கொண்டாடி மகிழ்ந்திருக்கிறேன்.

நான் எங்குப் பிறக்கப்போகிறேனோ, ஒளி நிரம்பிய அந்தத் தீவை, விண்மீனை என் கண்முன் காண்கிறேன். ஒய்வுப் பொழுதின், விளைந்திடும் ஆழத்தில் என் வாழ்க்கை தன் பணியைத் தொடங்குகிறது.

- ப.ப.

குருட்டுப் பாம்பு இருட்டுக் குழியில் இருக்கிறது. அது தன் தலையில் உள்ள மணி ஒளியையும் அறியாது, பரிதியின் ஒளியையும் அறியாது.

-கீ