பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

189


தெரிந்தால் பக்குவப்படாத அவற்றின் நெஞ்சங்கள் இன்றே நொறுங்கிவிடும்.

-நா

தன்னையே அளித்திடும் இறைவனின் உயிரோட்டம் கட்டற்றுச் செல்ல முனைந்திடும் மாந்தனின் வாழ்க்கையைத் தொட்டுச் செல்கிறது.

- ஆ

என் நெஞ்சம் உன் நெஞ்சத்தைத் தொடட்டும்; உன் அமைதியிலிருந்து நோக்காட்டை முத்தமிடட்டும்.

-நா

நெஞ்சமாகிய முன்பின் அறிமுகமில்லாத திட்டிலிருந்து திடுமென வேனிலாகிய கதகதப்பான மூச்சு வெளிப்பட்டது.

அவள் உடலின் ஒரு பெருமூச்சாகவும், அவள் நெஞ்சத்தின் கிசுகிசுப்பாகவும் அது என் நெஞ்சத்தை வருடியது.

-தோ

புதைந்துள்ள தனி அடியாழத்திலிருந்து ஒரு நொடி நேரப் பொழுதை விடுதலை செய்கிறது. தனித்தொரு விளக்கினால் ஒளியேற்றப்பட வேண்டிய மூடப்பட்டுள்ள இந்தக் கதவுகளுக்குள் புதியதோர் உலகை அது எழுப்பட்டும்.

-நா