பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

91


கூட்டத்தோடு கூட்டமாக நான் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மாடியிலிருந்து நீ புன்னகைப்பதைக் கண்டேன். நான் பாடலானேன், இரைச்சலில் யாவற்றையும் மறந்து போனேன்.

-ப.ப

அன்புடன் ஒன்றியிருக்கும்பொழுது, நமது மனவுறுதி முழுமை பெறுகிறது, ஏனெனில் அன்பே உண்மையான விடுதலையாகும்.

-எ.எ

உன் அன்பு முகத்தில் நான் கண்விழிக்கும் பொழுது நலமான எனது இரவு முடிந்துபோகிறது. புலர்காலை நெருப்பாகிற தன் உரைகல் மூலம் என் நெஞ்சத்தைத் தொடுகிறது.

-எ

அதனுடைய செல்லமாகிற சுமை உனக்கு அளிக்கப்படாததினால் என் நெஞ்சத்தை ஒரு கவலை வாட்டுகிறது.

-க.கொ

மண்ணில் கற்களை இழக்கிறபோது மடிந்து மக்கிப் போன இலைகள் வனத்தின் வாழ்க்கையில் பங்கெடுத்துக் கொள்கின்றன.

-மின்