இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 4. மண்ணோடு மண்ணானதே!
எங்கோ பிறந்தாய்; வளர்ந்தாய்நீ! எங்களுடன்
தங்கிக் கலந்து பழகினாய்;- எங்கள்
விழியேங்க, நெஞ்சம் மிகவேங்கச் சாவின்
வழிப்போனாய்! யார்பொறுப் பார்?
1
சித்தாந்தம் நீங்கித் திருப்பா திரிப்புலியூர்
‘முத்தமிழ்ப் பண்ணை’ முதல்வனாய்த் - தித்திக்கப்
பேசிப் பழகும் பெருங்குணத்தோய்! பிச்சையா!
நேசம் மறந்திடுமோ நெஞ்சு?
2
பச்சைத் தமிழா! பழகமிக ஏற்றவனே!
அச்சம் அறியாப் புலிப்போத்தே!-பிச்சையா!
‘அண்ணா!’ வெனவழைக்கும் அன்புத் திருவாய்தான்
மண்ணோடு மண்ணான தே!3
- 66