பக்கம்:இரவு வரவில்லை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீங்கரும்பே! சாறே!

செழுவாழை மாங்கனியே!

ஓங்கி வளர்தென்னை

உச்சி இளநீரே!6


கார்நிறைந்த ஊருணியே!

கண்கவரும் தாமரையே

சீர்நிறைந்த செம்பொன்!

சிறுசிலையே! ஒவியமே!7


இல்லத்து மாமணியே!

என்மகனே! பாரியே!

செல்வத்துட் செல்வமே!

செந்தமிழே! கண்ணுறங்கு!8


வெண்கலப் பாலடையால்

வேணமட்டும் பாலுண்டாய்!

கண்கலங்கக் கூடாதே

கண்மணியே! கண்ணுறங்கு!9


பாட்டி மனம்நோகும்;

பாட்டன்மார் கண்சிவக்கும்;

தீட்டா ஒளிக்கல்லே!

செல்வமே! கண்ணுறங்கு!10


நம்பி மகனே!என்

நற்றமிழே! நீயழுதால்

வம்புரைக்கும் மாற்றாரின்

வாயடைக்க உன்னப்பா11


80
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/86&oldid=1179414" இலிருந்து மீள்விக்கப்பட்டது