இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தீங்கரும்பே! சாறே!
- செழுவாழை மாங்கனியே!
ஓங்கி வளர்தென்னை
- உச்சி இளநீரே!6
கார்நிறைந்த ஊருணியே!
- கண்கவரும் தாமரையே
சீர்நிறைந்த செம்பொன்!
- சிறுசிலையே! ஒவியமே!7
இல்லத்து மாமணியே!
- என்மகனே! பாரியே!
செல்வத்துட் செல்வமே!
- செந்தமிழே! கண்ணுறங்கு!8
வெண்கலப் பாலடையால்
- வேணமட்டும் பாலுண்டாய்!
கண்கலங்கக் கூடாதே
- கண்மணியே! கண்ணுறங்கு!9
பாட்டி மனம்நோகும்;
- பாட்டன்மார் கண்சிவக்கும்;
தீட்டா ஒளிக்கல்லே!
- செல்வமே! கண்ணுறங்கு!10
நம்பி மகனே!என்
- நற்றமிழே! நீயழுதால்
வம்புரைக்கும் மாற்றாரின்
- வாயடைக்க உன்னப்பா11
- 80