ஒரு துறைக் கோவை 11 15
ஒருமான் மருவுகைச் சீராம காத ருகாகதகுல மருமான் மரு முல்லைச் சீராச ராசன் வரைய2னயாய் திருமான் மருவுகை கண்டு வடமலை சேவித்தவர் பெருமான் மருவிய கெஞ்சகத் தோடு பிறங்கு வரே.
மான் மருவு கை - மான்பொருந்திய திருக்கை. சீராமநாதர் உகந்த குலம் - சீராமநாதரின் திருவருளுக்குப் பாத்திரமான மறவர்குலம். சீராமனால் சேதுவைக் காப்பதற்காக நிலைக்கவைத்த மறவர்குல வழிவந்தவர் சேதுகாவலராம் சேதுபதிகள், மருமான்-வழித்தோன்றல் சந், தி. திருமால் மருவுகை கண்டு வடமலை சேவித்தவர் - திருமால் எழுந்தருளியிருத்தலைத் தரிசித்துத் திருவேங்கடமலையை வணங்கியவர்: பெருமான் மருவிய நெஞ்சகத்தோடு பிறங்குவர் - அப்பெருமான், பொருந்திய ; மனத்தோடு விளங்குவார். திரு மான் மருவு கை கண்டுஅழகிய மா னாகிய கண் பொருந்திய கையினைக் கண்டு; வடமலை சேவித்தவர் - வடங்கள் பொ ருந்திய மலையாகிய முலையினைக் கண்டவ ரெல்லாம்; பெருமால் மருவிய நெஞ்சகத்தோடு பிறங்குவர் - பெரிய ஆசை தோய்ந்த மனத்தோடு விளங்குவார். *
LG
சங்கை யிலாத புகழ்த்தனுக் கோடித் தடங்கடலான் கங்கையி லாய கொடைராச ராசன் கன வரையி ருங்கையி, லாயமைக் கண்டனைக் காட்ட வொருப்பட்டிலீர் எங்கையி லாய மலையாற் பயனென்கொ லெண்ணுவதே.
சங்கை - எண்; சங்கை இலாத - எண்ணிடமுடியாத, அளவில்லாத; தனுக்கோ டி - இராமேசுவரத்தீவில் உள்ள நீண்ட தீபகற்பப்பகுதி ; இது தீர்த்தக்கட்டமாகவும், கப்பல் துறையாகவும் முன்னர் விளங்கியது. 1965 - ஆம் ஆண்டு நிகழ்ந்த கடல் கொந்தளிப்பால் இப்பகுதி கடலுள் ஆழ்ந்துவிட்டது. தடங்கடல் - பெரிய கடற்பரப்பு; கம் கையில் ஆய கொடை - கம் - மேகம் , மேகத்தைக் கையில் கொண்டிருப்பதா ன கொடை, என்றது மேகம் போல் உதவும் கொடையாளன் என்றபடியா ம். கனவரை - மேகம் சூழ்ந்த மலை; பெருமைபடைத்த மலை; உம் கையில் ஆய மைக்கண்டனைக் காட்ட ஒருபட்டிலிர் - உம்முடைய கையிடத்ததாக வுள்ள மைக்கண்டனாகிய சிவபெருமானைக் காட்டுவதற்கு இணங்கி ரீைரில்லை . கைலா யமலையாற் பயன் என்கொல் எண்ணுவது - அந்நிலையில் எமக்குரிய கயிலாய மலையால் யாது பயன் நினைப்பது. சிவபெருமான் இல்லாத கயிலாய மலையால் பயன் இல்லை என்பதாகும்.