உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னம் படைக்கும்படி வேண்டினார். பலர் அவர்களை வைது அனுப்பினர். பலர் அடித்துத் துரத்தினர். முடிவில் அவர்கள் கிழவனும், கிழவியும் இருந்த குடிசையை அடைந்தார்கள். மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. கிழவனும், அவன் மனைவியும் தமது வீட்டிற்கு வந்தவர்க்கு அமுது படைத்தனர். அன்னம் மேலும், மேலும் அதிகப்பட்டுக் கொண்டே இருந்தது. அதைக் கண்டு கிழவனும், கிழவியும் ஆச்சரியம் அடைந்தார்கள். பின்பு, அவர்கள் அவ்விருந்தினர் வானுலகத்தவரோ என்று சந்தேகித்தார்கள்.

முடிவில் கடவுள் தமது சுயரூபத்தை அவர்களுக்குக் காட்டி, ‘அன்பர்களே, இவ்வூர்க் குடிகள் மகா பாவிகள். அவர்கள் எங்களை அடித்துத் துரத்தினார்கள். ஒரு பிடி அன்னம் அளிக்க அவர்கள் மனம் துணியவில்லை. மழை பெய்து கொண்டிருக்கும் இந்த நள்ளிரவில் எங்களை உபசரித்து அமுது படைத்த நீங்களே உத்தமர்கள். உங்களுக்கு ஒரு குறைவும் வாராது. நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்,’ என்றார்.

கணவனும், மனைவியும் கடவுளையும் அவர் தூதனையும் பணிந்து, ‘நீங்கள் இந்த ஏழைகளைப் பொருட்படுத்தி வந்ததற்கு நாங்கள் செய்த பாக்கியமே காரணம். நாங்கள் விருந்தினர்க்கு எப்போதும் அமுது படைக்கும்படி அருள வேண்டும். இருவரும் ஒன்றாகவே இறக்குமபடி வரம் தர வேண்டும்,’ எனறு வேண்டினர்.

56