பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 னரது கி. பி. 1745 ஆம் ஆண்டைய ஆவணங்களும், இதர அரசு ஆவணங்களும் உறுதி செய்கின்றன. ஆனல், இன்று இவர்களிடையே சமுதாய உணர்வும், அரசியல் ஈடுபாடும் இல்லாத காரணத்தினல், கல்வி மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம் ஆகிய துறைகளில் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களைப் போன்று குறிப் பிடத்தக்க நிலைகளை இவர்கள் எய்தவில்லை. O 4. வேளாண்செட்டி முதலியோர். இந்த மாவட்டத்தில் செட்டி எனத் தங்களே அழைத் துக் கொள்ளும் இன்னும் சில பிரிவினர்கள் உண்டு. அவ்ர்கள்ல் சிறப்பாக குறிப்பிடத்தக்க சிறு பான்மையி யினர் வேளாண் செடடி என்னும் பிரிவினர், ரீவில்லி புத்துார், ராஜபாளையம் ஆகிய வட்டங்களில் உள்ள னர். செட்டி என்ற தங்களது அடைமொழிக்கு ஏற்ப, இவர்கள் முழுமையாக வியாபாரத்தில் இல்லை. விவசா யத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாணிகத்தின் ஏற்றத் தாழ்வுகள். அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இவர் களது முந்தையோர், வாணிகத்திலும் விவசாயத்திற்கு மாறி இருக்கலாம். - இவர்கள் இந்து சமயத்தினராக இருந்தாலும் இவர் கள் குலதெய்வம் பட்டாணி என வழங்கப்படுகிரு.ர். இளம்பிறைக் கொடி தாங்கி, பரிமேல் அமர்ந்தவரான வீரத்திரு உருவம் தான் இவர்களது பட்டாணி எனப் படுகிருர். இந்தக் குதிரைக் கோல் ராவுத் தரை ஆயிர வைசிய செட்டிகளும் பட்டாணி அல்லது கோரக்கி நாதர் என வழங்கி வழிபட்டு வருவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. (திருப்புவனத்தை அடுத்து இந்த பட்