பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ேே. இராமன் - பன்முக நோக்கில் இராமனைப் போன்ற சமதிருஷ்டி இல்லாத ஏனையோருக்கு இவை இரண்டுமே தனித்தனியாக அனுபவிக்கப்படும் உணர்ச்சிகளாகும். இராமன் காடு செல்வதைக் கேள்வியுற்ற, பல்வேறு வகையினர் அடைந்த நிலையைச் சொல்லும்போது "TamilBOT (பேச்சு) 05:13, 26 பெப்ரவரி 2016 (UTC) மற்று உள்ள மாந்தர்களும், ஆராத காதல் அரசர்களும், அந்தணரும், பேராத வாய்மைப் பெரியோன் உரைசெவியில் சாராத முன்னம், தயரதனைப் போல் வீழ்ந்தார்". - கம்ப 1897 என்று தொடங்குகிறான், கவிஞன். ஐயறிவுயிர்களும் வேதனை உற்றன மக்கள் படும் அவலத்தையும், அரற்றியதையும் பல பாடல்களில் பாடிய கவிஞன், இராமன் பிரிவால் துயருற்ற ஐயறிவு படைத்த விலங்கு, பறவைகள் முதலியவற்றைப் பற்றித் தொடர்ந்து பேசுவது புதுமையானதாகும். கவிஞன் உயர்வு நவிற்சி அணிக்காக இவ்வாறு பாடினான் என்று நினைத்தால் கம்பனைப் புரிந்த கொள்ளாதவர்களாக ஆகிவிடுவோம். அவன் கூறிய 2 பாடல்களையும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். கிள்ளையொடு பூவை அழுத கிளர் மாடத்து உள் உறையும் பூசை அழுத உரு அறியாப் பிள்ளை அழுத, பெரியோரை என் சொல்ல? "வள்ளல் வனம் புகுவான் என்று, உரைத்தமாற்றத்தால். - கம்ப 1701 ஆவும் அழுத; அதன்கன்று அழுத, அன்று அலர்ந்த பூவும் அழுத, புனல் புள் அழுத கள் ஒழுகும் காவும் அழுத களிறு அழுத, கால் வயப் போர் மாவும் அழுத: - அம் மன்னவனைமானவே. . கம்ப 1703