பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密 224 家 இராமலிங்க அடிகள் இவரைப் பற்றிய ஒரு பாடல் வடகலைக்கும் தென் கலைக்கும் ஒப்பீடு செய்யும் கணக்கைக் காட்டுகின்றது. இலைக்குளநீ ரழைத்ததனில் இடங்கர்உற அழைத்ததன்வாய்த் தலைக்குதலை மதலைஉயிர் தழைப்ப அழைத் தருளியநின் கலைக்கும்.வட கலையின்முதற் கலைக்கும்.உறு கணக்குயர்பொன் மலைக்கும்.அணு நிலைக்கும்.உறா வன்தொண்டப் பெருந்தகையே (1) இந்தப் பாடல் அவிநாசியில் முதலையுண்ட பாலகனை வர அழைத்தருளிய திருப்பாட்டாகிய எற்றான் மறக் கேன் (7.92) என்ற தேவாரப் பதிகத்தின் உரைப்பார் உரையுகத்து (4) என்ற முதற் குறிப்புடைய பாடலில் வரும். 'கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச்சொல்லு, காலனையே’ என்ற அடியைப் பாடும்போது நடைபெறும் இந்த அற்புத நிகழ்ச்சியை நினைக்கச் செய்கின்றது. அடுத்து ஏழிசையாய் இசைப்பயனாய் (7.51:10) என்ற திருவாரூர்த் தேவாரத் திருப்பாட்டை நினைந்து கருவிகரணங்களெல்லாம் கரைந்து கரைந்து இன்புறும் பாங்கில், ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை ஆழநினைந் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்து