பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

第 3O2 球 இராமலிங்க அடிகள் 95. இறை எளிமையை வியத்தல்: இறைவன் எல்லார் மாட்டும் அன்புடையவன்; தந்தை, தாய் அனைய பாசமுடையவன். எளிமையுடன் வந்து ஆட்கொள் ளும் அருட்பெருஞ்சோதி அவன். அத்தகைய எளிமை யைப் பாராட்டி அடிகள் வியத்தலை இப்பதிகம் பகர் கின்றது. இதில் உள்ள பத்துப் பாடல்களும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. வேதாந்த நிலையும்.அதன் அந்தத்தே விளங்கும் மெய்ந்நிலையும் காட்டுவித்தீர் விளங்கியசித் தாந்தப் போதாந்த நிலையும்.அப்பால் புகல்அரிதாம் பெரிய பொருள்நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது பாதாந்தம் அறிவித்தீர் சுத்தவடி வுடனே பகர்பிரன வாகாரப் பரிசுஎனக் களித்தீர் நாதாந்தத் தனிசெங்கோல் நான்செலுத்தக் கொடுத்தீர் நடராச ரேதுமக்கு நான்எதுசெய் வேனே (3) - ஆர்நிஎன் றெதிர்வினவில் விடைகொடுக்கத் தெரியா அறிவிலியேன் பொருட்டாக அன்றுவந்தென் தனக்கே ஏர்நீடும் பெரும்பொருள்ஒன் றிந்துமகிழ்ந் தாண்டீர் இன்றுவந் தெளியேன்பால் எய்திஒளி ஒங்கப் பார்நீடத் திருவருளாம் பெருஞ்சோதி அளித்தீர் பகரும்எலாம் வல்லசித்திப் பண்புறவும் செய்திர் நார்நீட நான்தானாய் நடம்புரிகின் ஹீரே நடராச ரேதுமக்கு நான்எதுசெய் வேனே (4) கண்ணுடையீர் பெருங்கருணைக் கடலுடையீர் எனது கணக்கறிந்திர் வழக்கறிந்தீர் கனிந்துவந்தன் றுரைத்திர் எண்னுடையார் எழுத்துடையார் எல்லாரும் போற்ற என்னிதய மலர்மிசைநின் றெழுந்தருளி வாமப் பெண்ணுடைய மனக்களிக்கப் பேருலகம் களிக்கப் பெத்தருமுத் தருமகிழப் பத்தரெலாம் பரவ விண்ணுடைய அருட்சோதி விளையாடல் புரிய வேண்டும்என்றேன் என்பதன்முன் விரைந்திசைந்தீர் அதற்கே (7)