காசக் கச்க்கப் படலம்
105. சிறியனே தேனுங் குற்றம் செய்தனோ? தீரா கோயோ?
> எறியெனுங் கடுஞ்சொற் கூறி யேக்கமுண் டாக்கி
னீரோ ?
அறிதர வுரைப்பீ ரென்ன, அன்னையுன் தந்தை ராமா!
நெறிபிழை யாமை யாலே நெஞ்சநெக் குருகு கின் றார்.
106. மன்னவ ரெனக்குத் தந்த வாக்குறு தியைநிற் கோதின்
என்னதை நீகேட் பாயோ இல்லையோ வெனுமை
யத்தால்
உன் னியே தியங்கு கின்றார்; உறுதி கொடுப்பா யானால்
அன்னதை யுனக்கு நானே அறைகுவே னெனவே
ராமன்,
107, அன் னேயே எதுசொன் னாலும் அப்படி யேசெய்
கின்றேன்
•ான்னவே, பரதன் இந்நா டாளவும்; ஈரே ழாண்டு
துன்னிநீ யரிய கானம் ஆளவும் சொன் னூர் மன்னன்
இன் னையே செல்வாய் நீயும் இசைத்தசொற் றவறா
தென்றாள்.
108. சுடுகணை பாய்ந்த மான் போல் துணுக் கென வுள்ளம்
சோம்பி
விடுகணை யின்றித் தாயே! மிகுகுணப் பரதன் இந்த
நெடுநில மதையா மட்டும் நீடுற; வேண்டு மானால்
அடியனே னரிய கான மாளுகின் றேன் போ யென்றான்.
109. என்னினி • வேண்டுமானால்' இப்பொழுதேசெல் கென்ன
அன் னையே வருந்த வேண்டாம்; ஆட்சியில் விருப்ப
பரில்லை ;
இந்நிலக் குடிகள் தம்மை என்வழிப் படுத்து 16ாட்டு
மன்னவ னாக வாழ மனத்தினு நினைக்க வில்லை.
110, ஈங்கொரு வேளை நான்றாழித் திருந்திடில் பரதன் ஆட்சி
தாங்குக வென்றெ னக்குத் தருவனென் றச்சம்
போலும்;
கீங்குவேன் எனக்கை கேசி நீமிக நல்வன் மைந்த!
தீங்கொரு வருக்கும் பாவம் கனவிலுஞ் செய்ய
மாட்டாய்.
108. விடுகணை இன்றி. எதிர்மொழி கூற முடியாமல்..
பக்கம்:இராவண காவியம்.pdf/277
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
