4. எந்தையேயென் சொல்லுவோ மிரண்டான் செயலிகள்
சிந்தையில் நினைக்கவும் திடுக்கிடு தடுக்கிலான்
வெந்தபுண்ணில் வேறுழைக்கும் வீணர்போலவாரியர்
கந்தவே நம் மூரைவிட்டு நடந்தனன் பகைப்புலம்.
5. அன்றுவந்த வனுமனு மடைந்துபீட ணன்மனை
வென் றிவாலி கொலையினை விளம்பியாவ லூட்டிங்
சென்றுசேறின் வடவனைச் சிறந்த சுக்கி ரீவனின்
ஒன்றிவாழ வைப்பனென் றுளவுகூறிச் சென்றனன்.
உளவுவந்த வனுமன்சொல்லை யுறுதியாகக் கொண்டுமே
களவுகொண்ட கன்வர்போலக் கவலைகொண்ட
முகமுடன்
அளவுகொண்ட படைவலார்க ளான நால்வ ரோடவன்
குளமகன்ற பறவைபோலக் குந்தியாங்கு வந்தனன்.
7. கொடியரான நீலன்வேலன் குயிலன்நேரி யாகிய
படைவலாரி னோடுகூடிப் பழிமலிந்த பாவியும்
வடவராமன் றனையடைந்து மலரடி பணிந்துமே
அடிமையாகி யவணுளானவ் வறிவிலாத வடவனும்.
8. அடிமை தன் னை யிலங்கையாள மரசனாக்கி யவன தா
முடிபுனைந்து துணை வனாக்கி முண்டசேனை சூழ்தர
விடியுமுன்ன இலங்கைதன்னை வென்று தந்து மீள்வதாய்
மடவனீது புகலவோடி வந்தமென் றுரைத்தனர்.
அவ்வுரைசெ புகாமு னண்ணலுங் கொதித்தெழாக்
கொவ்வையென் ன விருகணுங் குறுக்கினிற் சிவப்புற
ஒவ்மொவ்வு மடிமைவாழ்வ துணர்விலாத விரண்டகத்
கெவ்வகையு மொவ்வுயென் றி தழ்கடித் தழன்றுமே,
10. உடன்பிறந்த விளவலென்னு முரைகழிந்தின் ருேடென
துடன் பிறந்த பகைவனென் னு முரைவழங்க, ராமனுக்
குடன்பிறந்த வடிமையான வொப்பீலாத பாவியை
உடன்பிறந்த கழலையென்ன வுயிர்குடிப்ப னாக்ளையே.
8. மடவன் - அறிவற்றவன். -
18. கீழலை- உடலிற் றோன் றுங் கட்டி,
பக்கம்:இராவண காவியம்.pdf/418
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
