பக்கம்:இராவண காவியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலங்கைப் படலம் 100, 4 புக்கில ரெனமனம் புழுங்கு வோர்களைப் பொய்க்கதை பற்பல புகன்றும், மெய்ப்பொருள் தொக்கிய நகைச்சுவைக் கதைகள் சொல்லியும் தக்கசெந் தமிழ்மொழித் தாயர் தேற்றுவர். 101. உடைமையை நாடியே யூரை நீங்கினோன் கடமையிற் றவறியே காலந் தாழ்க்கவக் கொடுமையை யிதுவெனக் குறிப்பி னோரவே மடமொழி யிறைச்சிமேல் வைத்துக் கூறுமே. 102. தாய்தனைப் பிரிந்தகந் தனித்த பேரிளஞ் சேய்தனைப் பேணிடுஞ் செவிலித் தாய்சொலும் ஆய்தமிழ்க் குரியபண் ணத்தி கேட்டுமே வாய்தனைத் திறந்து தன் மகிழ்ச்சி காட்டுமே. , 103. ஓட்டியே யழுகையை யுவந்த வாவொடு கேட்டிடச் சிறுவர்கள் கிளந்து செந்தமிழ்ப் பாட்டினு முரையினும் பயிலப் பாங்கொடு பாட்டியர் விடுகதை பகரு வாரரோ. 104. தெருவிடைத் தயிர்த்தலைச் சிறுவர் தாயர்கை ஒருவியே யகப்படா தோட்டங் கொள் எதவர்; பருகிட மறுத்துணாப் பந்தர் சுற்றியே திருவமர் சிறுமியர் சினப்பச் செய்குவர், 105. சென்றுடன் மீண்டவோர் தென்னம் பாவைக்கும் வென்றிவண் பொருள்கொடு மீண்ட நம்பிக்கும் தன் றமர் நீங்கிய தமிழ் நங்கைக்கும் மன்றல்செய் தேதமர் மகிழு வாரரோ. 106, உளத்திடை யொப்புமை யுருவந் தைத்திடக் குளத்தெழு நிலவினிற் க. டிக் கும்பலாய் அளித்தொடர் குழலியர் பாடி. யாடிடும் களத்திடை வழிநிலைக் காட்சி காண்பரால். 101. உடைமை - பொருள். ஓர-தெரிய. இறைச்சி- கூறும் பொருளின் புறத்தே சொல்லும் குறிப்புப் பொருள். அது, கருப்பொருள் சர் கி, துவ்து. 108, பண் ணத்தி-ஒருவகை இசைப்பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/95&oldid=987597" இலிருந்து மீள்விக்கப்பட்டது