பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பெருந்தமிழர் 49 மாத்திரம் பாடமாய் இருந்தது. அதை ஒரு துரை அச்சிட்டிருந்தார். அதில் தமிழைக்காட்டிலும் இங்கி லீஷ் அதிகமாயிருந்தது. நூல் முற்றும் படித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசையால் நான் போகும் இடங்களில் உள்ள வித்துவான்களே எல்லாம் விசா ரித்துப் பார்க்கிறேன். எல்லோரும் அந்தாதி, பிள் ளேத் தமிழ், புராணங்கள் இவைகளோடு கிற்கிருர் களேயொழி:, மேலே போகவில்லை. அதனுல், கான் மிகவும் அலுத்துப் போய்விட்டேன். 'புஸ்தகம் மிகச் சிறந்த புஸ்தகம் 'கம்ப ராமா யணத்தின் காவிய கதிக்கெல்லாம் இந்தக் காவியமே வழி காட்டி. இதைப் படித்துப் பொருள் செய்து கொண்டு பாடம் சொல்வீர்களானல் உங்களுக்கும் நல்லது ; எனக்கும் இன்பம் உண்டாகும். ' முதலியார் கூறியவற்றை மிக்க கவனத்தோடு கேட்டு வந்தேன். தமிழ் நூற்பரப்பையெல்லாம் உணர்ந்து விளங்கிய பிள்ளேயவர்கள் கூடச் சிந்தர மணியைப் படித்ததில்லையென்பதை கி னே த் த போது, ' நாம் இந்தப் புதிய நூலேப் படித்துப் பொருள் செய்வது சுலபமாக இருக்குமா ! என்ற அச்சம் சிறிது தோற்றிலுைம், தமிழ் நூல் மரபுக் குப் புறம்பாக இல்லாத நூல் ஏதாயிருந்தா லென்ன ! ஸ்ம்ஸ்கிருதமா, தெலுங்கா நூதனமாகப் பயிற் சி செய்துகொள்ள வேண்டும் என்பதற்கு ? தமிழ் நூலே அறிவு கொண்டு ஆராய்ந்து படித்துப் பார்த்தால் விளங்காமலா போகிறது எவ்வளவோ நூல்களேப் படித்ததாகச் சொல்லியும், என்ன பிரயோசனம் என்று ஒரு கேள்வியில் தூக்கி எறியும் படி அந்தப் புஸ்தகத்தில் என்னதான் இருக்கிறது, பார்த்து விடலாம்! என்ற தைரியமே முன்கின்றது. 4.