பக்கம்:இரு விலங்கு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு விலங்கு

17


அரற்றவும் பொலிவுபெற்ற கிரெளஞ்ச மலை புலம்பவும் எழுந்தருளும் எம்முடைய தலைவனாகிய முருகன் அறிந்தால், இனிமேல் பிரமனுக்கு முன்பு போட்ட ஒரு விலங்கன்றி இரண்டு விலங்கு இடப்பெறும்,

 பட்டோலை-கணக்கு முதலியன எழுதும் ஓலை. அறிந் திலனோ-எண்ண வில்லையோ. தனி-ஒப்பற்ற. ஒதம்-கடல். வாய்விட-ஒலிக்க. சிலம்பு புலம்ப தன் திருவடியில் உள்ள சிலம்பு ஒலிக்க என்றும் பொருள் கொள்ளலாம். வாய்விட, புலம்ப, எடுத்து வரும் எங்கோன் என்க.
 பட்டோலையில் இட என்பது, இடுவதாக இருந்தால் என்னும் பொருளுடையது. 
 இது கந்தர் அலங்காரத்தில் 89-ஆவது பாட்டு. 
                                 



இ.வி-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/39&oldid=1402450" இலிருந்து மீள்விக்கப்பட்டது