பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சூத்திரம்-கசு) இறையனார் அகப்பொருள் 113.

இனிக், கருவிக் கருத்தன் என்பது -
வாள் எறியும், சுரிகை குற்றும், இம்மிடா நாற்குறுணி அரிசிச் சோறு அடும் என இத்தொடக்கத்தன ;

இனிக், கருமக் கருத்தன் என்பது--
திண்ணை மெழுகிற்று, கலங் கழுவிற்று, மரங் குறைத்தது என்று சொல்லுவது.

'அறியக் கிடந்த இடம்' என்னும் அச்சொல் கருமக்கருத் தனாய் நின்றது என்பது.

அஃதேயெனின்,
இவ்வகை கருமக் கருத்தனாகச் சொல்லுதற்கு இலக்கணமுண்டோ எனின், உண்டு ;

'செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கியல் மரபே.' (வினையியல் - 49 என்பது.

அஃதேயெனின்,
குறியெனப்படுவ என்றாகாதே சூத்திரஞ் செயற்பாலது;
என்னை, இரவுக்குறி பகற்குறி என்று இரண்டு சொல்லுகின்றமையின்.
அஃதன்று இடம் என்னும் ஒருமை நோக்கிக் 'குறியெனப்படுவது' என்றார் என்பது. (18)

சூத்திரம் - 19



இரவுக் குறியே இல்வரை இகவாது.

என்பது என்னுதலிற்றோ எனின்,
மேற்சூத்திரத்துட் குறி இரண்டென்றார்,
அவற்றுள் இரவுக்குறி நிகழுமிடம் உணர்த் துதல் நுதலிற்று.
இதன் பொருள் :
இரவுக் குறி என்பது - இரவின்கட் குறியிடம் என்றவாறு;
இல்வரை இகவாது என்பது - இல்லிடத் தைவிட்டு நீங்காது என்றவாறு.
எனவே, புறத்தன்று என்றவாறாம்.

'இரவுக் குறியே இல்வரை இகவா
துணர உணர்த்த உரையி னான.'

என்றார் பிறரும் எனக்கொள்க.
இரவின்கட் குறி இல்வரை இகவாது எனப்,
பகற்குறி இல்வரை இகக்கும் என்பது சொல்லினார் ;
என்னை,
இராப் புள் உண்ணா என்றார்க்கு,
பகற்புள் உண்ணும் என்பது முடிந்தது;
இனி, இராக்குறி யென்று ஆகற்பாலது இரவுக்குறி யென்றா யிற்றுச் செய்யுளாகலான்.

இ. அ.- 8