சூத்திரம்-கசு) இறையனார் அகப்பொருள் 113.
இனிக், கருவிக் கருத்தன் என்பது -
வாள் எறியும், சுரிகை குற்றும், இம்மிடா நாற்குறுணி அரிசிச் சோறு அடும் என இத்தொடக்கத்தன ;
இனிக், கருமக் கருத்தன் என்பது--
திண்ணை மெழுகிற்று, கலங் கழுவிற்று, மரங் குறைத்தது என்று சொல்லுவது.
'அறியக் கிடந்த இடம்' என்னும் அச்சொல் கருமக்கருத் தனாய் நின்றது என்பது.
அஃதேயெனின்,
இவ்வகை கருமக் கருத்தனாகச் சொல்லுதற்கு இலக்கணமுண்டோ எனின், உண்டு ;
'செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கியல் மரபே.' (வினையியல் - 49 என்பது.
அஃதேயெனின்,
குறியெனப்படுவ என்றாகாதே சூத்திரஞ் செயற்பாலது;
என்னை, இரவுக்குறி பகற்குறி என்று இரண்டு சொல்லுகின்றமையின்.
அஃதன்று இடம் என்னும் ஒருமை நோக்கிக் 'குறியெனப்படுவது' என்றார் என்பது. (18)
இரவுக் குறியே இல்வரை இகவாது.
என்பது என்னுதலிற்றோ எனின்,
மேற்சூத்திரத்துட் குறி இரண்டென்றார்,
அவற்றுள் இரவுக்குறி நிகழுமிடம் உணர்த் துதல் நுதலிற்று.
இதன் பொருள் :
இரவுக் குறி என்பது - இரவின்கட் குறியிடம் என்றவாறு;
இல்வரை இகவாது என்பது - இல்லிடத் தைவிட்டு நீங்காது என்றவாறு.
எனவே, புறத்தன்று என்றவாறாம்.
'இரவுக் குறியே இல்வரை இகவா
துணர உணர்த்த உரையி னான.'
என்றார் பிறரும் எனக்கொள்க.
இரவின்கட் குறி இல்வரை இகவாது எனப்,
பகற்குறி இல்வரை இகக்கும் என்பது சொல்லினார் ;
என்னை,
இராப் புள் உண்ணா என்றார்க்கு,
பகற்புள் உண்ணும் என்பது முடிந்தது;
இனி, இராக்குறி யென்று ஆகற்பாலது இரவுக்குறி யென்றா யிற்றுச் செய்யுளாகலான்.
இ. அ.- 8