பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



இறையனார் அகப்பொருள் (களவு தாது; ஒழுக்கமே திணை எனப்படும். குறிஞ்சியாகிய ஒழுக்கம் நிகழ்ந்த நிலமும் குறிஞ்சி எனப்பட்டது; என்னை, விளக்காகிய சுடர் இருந்த இடனும் விளக்கு எனப்பட்டது போல என்பது. இனி, ஒரு சாரார் ஒழுக்கத்தினையும் திணை என்ப, நிலத் தினையும் திணை என்ப. ஆகலானன்றே, ' அன்பினைந்திணை' என்றது, ஐந்தினையாடை , ஐந்திணை மஞ்சிகை என்றதுபோல என்ப; அது பொருந்தாது. அஃதே கருதியது எனின், முன்னர்த், ' திணையே கைகோள்.' (இறையனார் -இசு) என்னானன்றே, இணையே கைகோள்' என்னுமன்றே, இணை என்று கரு தினானாயின் என்பது. அஃதேயெனின், 'ஐந்து திணை' என்னும், ஐந்து சாண், ஐந்து கணம் என்றது போல எனின், அறியாது கடாவினாய்; ஐந்து தலையுடைய நாகத்தை ஐந்தலை நாகமும் என்ப; ஐந்து தலை நாகமும் என்ப; இரு முடிபும் உடைத்து. என்னை, குற்றியலுகரப் புணரியலுள், ' முதனிலை யெண்ணின் முன் வல்லெழுத்து வரினும் ஞாமவத் தோன்றினும் யவவந் தியையினும் முதனிலை யியற்கை யென்மனார் புலவர்.' (குற்றியலுகர-எங) என்றாராகலின். ஐந்திணைக் களவு அஃதேயெனின், அன்பினானாய ஒழுக்கத்தை அன்பின் வேறென்று கொள்வல், தச்சனானாய மாடம் தச்சனின் வேறு ஆயது போல என்றாற்கு, அதுவன்று; பொன்னினானாய குடம் பொன்னின் வேறல்லதுபோல என்பது. மூன்றாம் வேற்றுமை காரண காரியத்தை வேறு உணரவும் நிற்கும், வேறன்றி உணர வும் நிற்கும்; அவற்றுள், வேறன்றி உணரநிற்கும் பகுதி கொள்க. அஃதேயெனின், 'ஐந்திணை' என்பதன் முன்னர்க், 'களவு' என்னுஞ் சொல் எத்திறத்தான் வந்தது? ஒரு சொன்முன் ஒரு சொல் வருங்காற் பயனிலை வகையானும், தொகைநிலை வகை யானும், எண்ணுநிலை வகையானும் என மூன்றினுள் ஒன்று பற்றியன்றே வருவது; அவற்றுள், இஃது எவ்வகையான் வந்ததோ எனின், தொகைநிலைவகையான் வந்தது என்பது. தொகை தாம் பல; அவற்றுள் இஃது எத்தொகையான் வந் ததோ எனின், வேற்றுமைத்தொகையான் வந்தது என்பது.