பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



35 சூத்திரம்-உ) இறையனார் அகப்பொருள் உள்ளம் ஓடினவழி ஒடுவித்தல் தக்கதன்று என்பதனால் அது வும் மாறுகொள்ளும் என்பது. மற்று என்னையோ உரைக்குமாறு எனின், அவர் தம்முள் மெய்யுற்றுப் புணர்ந்திலர், இருவர் தம் காமமுமே தம்முட் புணர்ந்தன என்று, இங்கனம் உள்ளங்களானின்று புணர்வது புணர்ச்சி; இது பிறரொருவர் உணர நெடுங்காலம் புணர்த லாகாது என நீங்கும் நீக்கம் பிரிவு; அப்பிரிவின்கட் சொல்லு வது மெய்யுறு புணர்ச்சிக்குச் சொல்லுவன. எல்லாஞ் சொல் லவே அமையும். பாங்கற்கூட்டத்தின்கண்ணும் தோழியிற் கூட்டத்தின்கண்ணும் எல்லாம் அதுவே. வரைந்து எய்திய ஞான்று மெய்யுறு புணர்ச்சி உண்டா வது என்ப. களவுப்புணர்ச்சி - மெய்யுறுப்புணர்ச்சி அது பொருந்தாது என்று மெய்யுறுபுணர்ச்சி வேண்டு வார் சொல்லுவது; மெய்யுறு புணர்ச்சி தக்கின்று என்று ஆகாதே உள்ளப்புணர்ச்சி வேண்டியது; அங்ஙனங் கருதின், பிறர்க்கு உரிய பொருண்மேல் உள்ளத்தை ஓடவிடுதல் தக் கின்று என்று' மீட்க அமையாதோ என்பது. அல்லதூஉம், உள்ளத்தான் வேட்கை செல்லினும் மெய்யுற்றார் ஆயிற்று. அதன்கண் இருபுடை கருதி ஆகாதே; ஆகவே, இவட்குக் கற்பழியும் பிறரொருவரை வழிபட. இனி, உள்ளஞ் சென்ற பொழுதே அமைந்து இரண்டாவதில்லை என்று கருதினானே எனினும் மெய்யுறவே; குற்றம் என்னோ என்பது. அல்ல தூஉம், மெய்யும் மொழியும் என்பன உள்ளத்தின்வழியவன்றே, அஃது இறந்தபின்னை இறவாது நின்றது என்னோ என்பது. அல்லதூஉம், பார்ப்பான் பாதகமாயிற்றொன்று நினைக்குமாயின் பிராயச்சித்தத்திற்கு உரியனாம்; அதனாற் செய்கையும் நினைப்பும் ஒக்கும் என்பது. அல்லதூஉம், மெய்யுறுவது ஆகாது என்னுந் தெரிந்துணர்ச்சி உண்டாயின் தமியர் என்பதெனொடு மாறு கொள்ளும் என்பது. அல்லதூஉம், கந்தருவர் உள்ளத்தாற் புணர்ந்தாராயின், இவரும் உள்ளத்தாற் புணர்ப என்பது; என்னை, கந்தருவ வழக்கத்தோடு ஒக்கும் என்றமையின் என்பது. அல்லதூஉம் தெரிந்துணர்வு உண்டாமே எனின், அன்பினான் நிறைந்தார் என்பது அமையாது; என்னை, நிறைந்திருந்ததோர் கொள். கலம் பிறிது ஒன்றற்கு இடங் கொடாததுபோல என்பது. இவர் உத்தமராகலான் உள்ளத்தானே புணரப் போகம் முடியும்