பக்கம்:இறைவர் திருமகன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

விருந்து விழா அணுகியதும், நாசரத்திலுள்ள மக்கள் பலரோடு சோசப்பும், மேரியும் அவர்களின் மகன் இயேசுவும் அவன் தோழர்களும் செருசலம் நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்கள் வழி நடந்து போகப் போக வெவ்வேறு பாதையிலிருந்து மக்கள் பலர் வந்து சேர்ந்து கொண்டார்கள். இவ்வாறாகப் போகப் போகக் கூட்டம் பெருகிக் கொண்டே வந்து கடைசியில் அதுவே ஒரு பெரிய ஊர்வலமாகி விட்டது.

“இறைவன் இருக்கும் ஆலயத்தை
எய்து வோமென் றுரைத்தார்கள்
குறைவில் லாத மகிழ்ச்சியுடன்
குதித்துப் பறந்து வந்தேனே!"

என்று இன்பப் பாட்டுப் பாடிக் கொண்டே அந்தக் கூட்டத்தினர் நடந்தார்கள்.

மாண்பு மிக்க செருசலத்தை
மலைகள் சுற்றி இருப்பதுபோல்
ஆண்ட வன்தன் மக்களையே
அணைத்துக் காப்பான் கண்டீரே.

செருசலம் நகரின் அருகில் வந்தவுடன் அவர்கள் இப்படிப் பாடிக் கொண்டு நடந்தார்கள்.

ஏசு-2