பக்கம்:இறைவர் திருமகன்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அவர்கள் அப்பொழுதே தங்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.

மேலும் நடந்து செல்கையில், செபிடீ என்பவரின் மக்களான ஜேம்ஸ் ஜான் என்பவர்கள், தங்கள் தந்தையுடன் ஒரு கப்பல் தட்டில் உட்கார்ந்து வலையைச் சரி செய்து கொண் டிருந்தார்கள். அவர்களை இயேசுநாதர் அழைத்தார்.

அவர்கள் உடனே தங்கள் தந்தையையும் கப்பலையும் விட்டுப் பிரிந்து அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.

நான்கு சீடர்களும் பின் தொடர் அவர் கலீலீ நகரில் எங்கெங்கும் சென்று இறைவனின் பேரரசைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டே சென்றார். அவருடைய புகழ் எங்கெங்கும் பரவியது.