xxxiii
உலகெல்லாம் நோக்கினால் ஆட்டத்திற்குத் தனியிடம் இருத்தல் தெளிவு. ஆட்டம் என்பது விளையாட்டு! எத்தனை எத்தனை ஆயிரம் பேர் என்னும் நிலையில்லை. தொலைக்காட்சி வந்த பின், கோடி கோடிப் பேர் என்னல் வேண்டும்! இருந்த இடத்தில் இருந்து, ஆடற்களத்தை நோக்கிக் களிப்புறுகின்றனர்! அவ்வாடற் களத்திற்கு எத்தனை நிலவரைகள் — கோடுகள் — குறிகள்! அவ்வாடற் கலைக்கு எத்தனை சட்ட திட்டங்கள்! நெஞ்சத்தின் ஆடலாய், நாவின் ஆடலாய், கையின் ஆடலாய், குறிப்பின் ஆடலாய்த் திகழும் மொழிக்கு வரைகளும் விதிகளும் இல்லையேல் என்னாம்? மொழியென ஒன்றுண்டோ ? மொழியின் சிறப்பு நாம் உணர வேண்டுமா?
எந்த இடத்திற்கும் பெயரில்லை; எந்தப் பொருளுக்கும் பெயரில்லை; பார்க்கும் எதற்கும் பெயமில்லை; செய்யும் எதற்கும் பெயரில்லை; சொல்லே இல்லாத உலகம்—அந்த உலகத்திலே நாம் நம் கருத்தை வெளிப்படுத்த வகை என்ன ?
கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் கற்றறிந்தும் எத்தனை எத்தனை கோடிப் பேர்கள், எத்தனை எத்தனை கால காலங்களாக, உருவாக்கியும் திருவாக்கியும் வைத்தது மொழிவளம்! அவ்வளத்தின் அடிப்படைச் சிறப்பையும் அறியாமையாலேயே — விடுதலையின் விலைமானத்தையும் விழுப்பத்தையும் அறியாமையால் நிகழும் நிகழ்ச்சிக் கேடுகள் எத்துணை! அவற்றைப் போலேயே — மொழிச் சிதைவையும் கேட்டையும் செய்து வரும் சிறுமைச் செயலரும், காலந்தோறும் பல்வேறு பெயரில் வடிவில் வந்துளர்! இவற்றுக்கெல்லாம் ஈடுதந்து வெற்றி கண்டு வாழ்தற்கு அமைந்தது இலக்கணக் கட்டுக் கோப்பே!
சான்றோர் ஒழுகும் ஒழுக்கமும், அவர்களின் சீரிய பண்பாடுகளுமே ஒழுக்க நூலாகவும், சட்டமுறைகளாகவும்
இ. வ–C