பக்கம்:இலக்கியக் கேணி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரங்குன்றின் அணி 67

சந்தனத்தைத் தெளித்து, (வேலன் அரைக்கண்ணே விடையைக் கட்டின பூசையையுடைய கடிமரமாகிய) கடம்ப மரத்தை உரையாலே ஏத்துவர் : ஆலாபனம் செய்து பாடுவர். இங்ங்ணம் நாடோறும் வழிபடுவோர் திருப்பரங்குன்றத்து அடியின்கண் உறைவர். இவ் வன்பர்கள் தேவர் உலகத்து உறைதலையும் வேண்டார்.

திருப்பரங்குன்றத்தின் சிறப்பு (9-21).

திருப்பரங்குன்றத்தின் ஒருசார் பாணர்களது யாழ் இன் தீங்குரல் எழ, அதன் எதிர் யாணர் வண்டின் இன்னிசை எழும்.

ஒரு பால் வேய்ங்குழலின் ஒலியெழ, அதன் எதிர் பண்ணுர் தும்பி முரலும்.

ஒரு புறம் மண்ணுர் முழவின் இசை எழ, அதன் எதிர் அண்ணல் நெடுவரை அருவி நீர் ஒலிக்கும்.

ஒரு பக்கம் பாடல் நல் விறலியர் அசைய, அவர் எதிர் வாடையினல் பூங்கொடிகள் அசையும்.

ஒரு திறம் பாடினி முரலும் பாலைப் பண் கிறை குறையோடு ஒலிக்க, அதன் எதிர் ஆடுசீர் மஞ்ஞையின் அரித்தெழும் குரல் எழும்.

இங்ங்னம் கல்விகளால் வென்றி பெற எண்ணிய வர்கள் மாறுமாருக எழுந்தாற் போன்ற தன்மையைச் செவ்வேளின் திருப்பரங்குன்றம் உடையது.

மாறுமா(று) உற்றனபோல் மாறெதிர் க்ோடல் மாறட்டான் குன்றம் உடைத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/68&oldid=676763" இலிருந்து மீள்விக்கப்பட்டது