68 இலக்கியக்கேணி
கணித்தாயினும் சேய்த்து (22-27)
பாடல் சான்று பல்புகழ் முற்றிய கூடலுக்கும் திருப்பரங் குன்றத்திற்கும் இடைநின்ற இடம் மிகவும் அணித்து; ஆயினும் மகளிரும் மைந்தரும் நெருங்கி விளையாடுதலால் மிகச் சேய்த்து ஆகாகின்றது: மகிழ்ச்சி மிக்க அம்மகளிரது கூந்தலினின்றும் மைந்தரின் குஞ்சியி னின்றும் வீழ்ந்து அவிழ்ந்த மாலைகளால் தடுக்கப்பெற்று இயங்கு நெறி இல்லையாயிற்று.
இமையாரும் இமைப்பர் ! (29-32)
புகழால் திசையெங்கும் பரவிய திருப்பரங்குன்றின் கண் மேவி, உலகத்தார் பலவிடத்தும் செய்கின்ற பூசை யில், செவ்வேள் ஆவியாக ஏற்றுக்கொள்ளும் அகிற்புகை மேலே போதலால் தேவர்களும் இமைப்பர் சூரிய மண் டிலமும் தோன்ருமல் மறையும்.
அனைய பரங்குன்றின் அணி (33.41)
ஈர மாலை இயல் அணியார்-வளை முன்கை வணங் கிறையார் ஆகிய மகளிரும், அவர் அணைமென் தோளின் கண் தங்கி அன்பு ஒத்தார்-தார் மார்பின் தகையியலார் ஆகிய மைந்தரும் மனம் மகிழ்துங்கிப் பாய்ந்தாடுத லால் வண்டுகள் வெருவிச் சுனைமலர்த்தாதினை ஊதப் பெரு. திருப்பரங்குன்றினது அலங்காரம் அத்தன்மைய !
ரது வயலின்கண் பரக்கும். அவ்வருவியில் விளையாடு மகளிர் இயங்குதலால் அவர் பூணினின்றும் விழுந்த லே' மணி உழுகிலத்தைச் சிதைக்கும்.