பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 103



கீழ் இருந்து வெற்றிக்கெல்லாம் பெருந்துணையாய் வாழ்ந்த அவனைத் தன்னைப் பணிந்து வாழும் ஒரு சிற்றரசன் எனப் பழித்து விடாது, தான் பாடிய பாட்டொன்றில், அவனையும், அவன் வில்லாற்றலை யும், தேர்ப்படையின் பெருமையினையும் பாராட்டிப் புகழ்ந்துள்ளான்! என்னே அவன் பெருந்தகைமை!

“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்”

என்றார் வள்ளுவர். பேராண்மையும், பெருஞ்செயலும் உடையவனாய் வாழ்ந்த ஒல்லையூர் தந்தான், புலவரும் பாராட்டும் புலமையும், ஆன்றோரும் வியக்கும் அருங்குணமும் வாய்க்கப் பெற்ற ஒருவரை மனைவி யாகப் பெற்ற மாண்பும் உடையவனாவான். பேராலவாயர் முதலாம் பெரும் புலவர்களும் பாராட்டும் பேறு பெற்றாராய, கற்பு இஃது என்பதை உலகத்தார்க்கு எடுத்துக் காட்டினாராய பெருங்கோப் பெண்டே, ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனின் உயிர்த்துணைவியாராவர். மாட்சி நிறைந்த மனைவி யாரைப் பெற்ற பேறுடையான் பூதப்பாண்டியன்.

இவ்வாறு எல்லா வகையாலும் இணையிலாப் புகழ் உடையோனான பூதப் பாண்டியன், அறமல்லன. புரிதலே ஆண்மையாளர்க்கு அழகாம் என்பாரை இருத்தி ஆட்சி புரிதல் அரசர்க்கு அடாது என அரசனுக்கும், நண்பரோடு அன்புகொண்டு வாழ்வதே நல்லோர் நாட்டமாம் என நண்பர்களுக்கும், உயர்