பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

என்பது பாடல் பகுதி, இதன்படி நோக்கின், நீண்ட காலத்துக்கு முன்பே, வேங்கட மலையில் திருமால் வளையும் ஆழியும் கைக்கொண்டிருந்தார் என்று எண்ண வேண்டியுள்ளது. உண்மையில் இளங்கோ வடிகள் காலத்தில் திருமால் சிலையின் கைகளில் சங்கு சக்கரம் இருந்திரா. பொதுவாகத் திருமாலுக்கு வளையும் ஆழியும் உண்டு என்பது அனைவரும் அறிந்த செய்தி, இந்த அடிப்படையில், வேங்கடமலைத் திருமால் கைகளிலும் வளையும் ஆழியும் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டே இளங்கோ வடிகள் இவ்வாறு கூறியிருக்க வேண்டும். இளங்கோ வடிகள் காலத்திற்கு முன்பே முருகன் திருமாலாக்கப்பட்டு விட்டார். பின்னர் செயற்கை வளையும் ஆழியும் பொருத்தப்பட்டன.

பரிபாடல்

இளங்கோ வடிகள் கூறியிருப்பது ஒருவகைக் கவிமரபு. பரிபாடல் என்னும் நூலிலும் பொதுவாகத் திருமாலைப் பற்றி இப்படி ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது. பாடல் பகுதி வருமாறு:

"பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த
இருவேறு மண்டிலத் திலக்கம் போல
நேமியும் வளையும் ஏந்திய கையால்"

(பரிபாடல் 13 : 7—0)

என்பது பாடல் பகுதி. இருவேறு மண்டிலம் = ஞாயிறும் திங்களும். நேமி=சக்கரம். வளை = சங்கு. இப்பாடல் வேகேடமலைத் திருமாலைக் குறிப்ப தன்று: பொது, வாகத் திருமாலைப் பற்றிக் குறிப்பது.