பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49


இல்லாமல்—அள்ளாமல்

இலக்கியச் சான்று வேண்டுவோர்க்கு இதுவரை கூறிவந்த சான்றுகள் போதாவா? முருகன் காவடி ஒருபுறம் இருக்க, வேறு ஊர்களைப் பற்றி இவ்வாறு கூறாமல், இந்த வேங்கடத்தைப் பற்றி மட்டும் இவ்வளவு சிக்கலும் குழப்பமும் உண்டானதற்கு உரிய காரணமென்ன?- என்பதை மீண்டும் ஆழ்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். இராமாநுசரே மாற்றுக் கொள்கையையும் குறிப்பிட்டுள்ளாரே. எங்கள் குடும்பத்தில் நடைபெறும் படையல் முறைக்கு-கடவுள் வழிபாட்டு முறைக்கு எந்த இலக்கியத்திலும் சான்று இல்லை. நாங்கள் செய்வதே வழி வழிச்சான்று. காவடியும் இன்னதே.

"இல்லாமல் பிறக்காது-அள்ளாமல் குறையாது’ என்னும் பழமொழி நூற்றுக்குநூறு பொருந்தாவிடினும் பெரும்பாலும் பொருந்தும். எனவே 'அரோகரா’ போடலாம். -

"திருப்பதி-திருமலை முருகனுக்கு அரோகரா"
"திருப்பதி-திருமலை முருகனுக்கு அரோகரா"
"திருப்பதி-திருமலை முருகனுக்கு அரோகரா"

"சாமி மலையேறி விட்டது."

கோவிந்தா - கோவிந்தா

யான் இவ்வாறு எழுதியதால் என்னை மத வெறியன் என்று எவரும் எண்ணலாகாது "எம்மதமும் சம்மதம்" என்னும் கொள்கையுடையவன் யான். உண்மை விளம்பியான். பின்வருவனவற்றை யான் கூட்டத்திலும் கூறினேன். எங்கள் குடும்பத்தில் சைவ வைணவ வேறுபாடே கிடையாது. எங்கள் குடும்பத்துக் குழைந்தைகட்கு