661
இம்மரம் நிறைந்த காடு 'அழிஞ்சிக்காடு' எனப்படும் பாலைக்காடு எனவே, இதன் பூ பாலை நிலப் பூ. வேனிலில் பூக்கும். வெண்மை நிறமுள்ளது. சங்கப் பாடல்களில் பூபற்றிய குறிப்பில்லை. திருத்தக்கதேவர் இதன் பூவை அடையாளங் காட்டி யுள்ளார். -
தூய வெண்மையான ஆடையை நீரில் தோய்த்துப் போர்த்தியது போன்றது - என உவமைகாட்டி,
'மாசில்வெண் டு கிலை நீர்தோய்த்து
மேற் போர்த்த வண்ணமேபோல் காசின் மட்டொழுகப் பூத்த அழிஞ்சில்' 1 -
. . . .” - என்றார். இது கொண்டு இது கொத்துப் பூ என்பதையும், மெல்லியது என்பதையும், பனிப்படலம் போன்ற வெண்மை நிறமுடையது என்பதையும் உணரலாம். சூடும் பூவாக இல்லை.
65. மணப் பூச்சு மர மலர்.
- ஆரம்.
ஆரம்' என்பது சந்தன மரம், மணத்திற் பெயர் பெற்ற மரம். மணப்பொருளாகவும் கலைப்பொருளாகவும் பயன்படுவது. 'குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்' என்கிறது பட்டினப் பாலை. இதனைப் பொதியமலைப் பிறப்பாகக் கூறுவர். 'கறிவளர் சந்தனம்' எனக் கபிலர் மலைநிலத்து மிளகுக்கொடி இதில் படர்வதைக் குறித்தார். . .
குறிஞ்சிப்பட்டியலில் வந்துள்ள குறிப்பன்றி வேறெங்கும் இதன் பூவைப் பற்றிய குறிப்பில்லை. அங்கும் பெயரளவே உள்ளது. - *
மரவகையில் கோட்டுப்பூவாக, மலைமரத்தால் குறிஞ்சியாக வேனிலில் பூப்பதாக, வெண்மைப் பூவாக அமைந்தது. - சந்தனத் தளிர்மாலை' என்றார் திருத்தக்க தேவர். பாரதியாரும் 'சந்தன மலர் புனைந்தே' என்றார். இவை யெல்ல்ாம் வண்ணனை அளவே. மணப் பூச்சிற்குப் பயன்படும் சிறப்புள்ள மரத்தின் பூ என்பதே இதன் குறிப்பாகும். சூடிய
தாகச் செய்தியில்லை.
1. சிவ் சி:1849 குறி. பு:
2 பட், பா : 188 5 சிவ. சி , 2681 3 அகம் : 2: 6 பாஞ்,து 160