பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲፱.t ፡ በፖ. 175 "தத்துவ ஞானம் கைவரப் பெறாத எவனும் சிறந்த கவிஞனாகமாட்டான்" என்று திறனாய்வாளர் கூறுவர். வேண்டும் வரம்' எனுங்கவிதையில் கவிஞர் மனித வாழ்வு மாண்புற வேண்டுமெனில் மேற்கொள்ளத்தக்க வழிகளைப் பின்வருமாறு சொல்கின்றார். s வேண்டும் வரம் மனமென்ற பேயை விரட்டிப் பிடித்து வசத்தில் மடக்கிவிட்டால் தினம்வென்று வென்று சிரித்துச் சிரித்துத் திடங்கொண்டு வாழ்ந்திடலாம்! ஐந்து குதிரைகள் ஓடுமுன் பற்றி அதட்டி நிறுத்திவிட்டால், இந்த உலகம் நம்மைச்சுற்றி வந்திடும் இட்ட பணிபுரியும்! ஒட்டை உடலம் உருப்பட கித்தம் ஒரு சிங்தை கொண்டிருந்தால், கோட்டை யிதற்குக் கொடிகட்டிச் சேனைகள் கும்பிட வாழ்ந்திடலாம்: கேவல ஆசையின் வாய்கள் கொறுங்கக் கிழித்தெறிக் தால்.உலகில், சாவு பயப்படும்; மானுடம் வென்று "ஜயம் ஜயம் என்றாடும்! தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 113 கவிஞர் நலிந்தவர் வாழ்வைக் கண்டு நைபவர் என்பது அவரோடு பழகியவர்களும், அவர் எழுத்தை முன்னணி” பத்திரிகையிற் படித்தவரும் அறிவர். வானத்து மீன்களைப் பார்க்கும் கவிஞர்க்கு, அவை உடலுழைப்போர் உடம்பில்