பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... 254 இலக்கிய ஏந்தல்க கொடுமையிது கொடுமையெனக் கொதித்தெழுந்து கொடையண்ணா மலையரசர் பத்துப் பாட்டில் விடுகஇனித் தமிழ்பாட்டிற் காறி டங்கள் வேற்றுமொழிப் பாட்டுக்கு நான்கி டங்கள் தடைஎனவோ இதற்குமெனத் தமிழர் சார்பில் தமிழ்நாட்டில் தமிழரசர் பிச்சை கேட்டார் கெடுமதிய ரதன்பின்னு மிரங்கவில்லை கிளர்ச்சிசெய முனைந்தபினும் திருந்தவில்லை - )I 8 ו நம்முன்னோர் தேடிவைத்துத் தொன்று தொட்டு நமக்குரிமை யாகிவரும் வீட்டில் வாழ வம்பென்ன? வழக்கென்ன? அந்த வீட்டில் வாடகைக்கோ ரிடங்கேட்டோம் எவனி டத்தோ? அம்மொழியார் விரும்பவில்லை தடைக்கல் லானார் அடஇனியும் பொறுப்பதுவோ? உரிமைகாக்க இம்மண்ணிற் சிறுபுழுவும் முயலு மன்றோ இனிநமக்குத் தமிழரெனும் பெயர்தா னேனோ? (11:9. மாற்றிதற்குக் காண்பதற்கு கினைத்த அண்ணா மலையரசர் இயக்கமொன்று தமிழி சைக்குத் தோற்றுவித்தார்; நல்லவர்கள் ஒத்து ழைத்தார்; துணைகின்று பணிபுரிந்த இதழும் உண்டு சாற்றைகிகர் மொழிப்புலவர் துணிந்து வந்து தகுமுறையால் தமிழிசைக்குற் தொண்டு செய்தார்; வேற்றுமொழிப் புலமையிலும் வீறு பெற்று விளங்கு கதிரேசருக்கும் சரியங் குண்டு (1 of 10) இவ்வாறு பல்வேறு நிலைகளில் இக்காப்பிய ஆசிரியர் கவியரசு முடியரசனார். தமிழைப் பாடும் இடங்களில்