பக்கம்:இலக்கிய தீபம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

118 இலக்கிய தீபம் குறுந்தொகைப் பதிப்புக்கள் அனைத்திலும் சிறந்ததாகும் இதுவே இப்போது பலராலும் கற்கப்பட்டு வ வருவது. ஸ்ரீ ஐயரவர்கள் வெளியிட்ட இப்பதிப்பிலும் திருந்த வேண்டிய பகுதிகள் க உள்ளன. அவற்றுள் ஒன்றைக் குறித்து இங்கே கூற விரும்புகிறேன். C இந்நூலில் 113-ம் செய்யுள் 'மாதீர்த்தன்' என்ற ஒருவர் இயற்றியது. இப்பெயரை ாதிரத்தன் முதலாகப் பல படியாக வாசிக்க இயலும். உதாரணமாக, 'மாதீரத்தார்' என்று ஸ்ரீ இராமரத்ந ஐயர் எழுதியிருக்கிறார். டாக்டர் ஐயரவர்கள் மாதிரத்தன்' எனப் பெயரைக் கொண்டு, C மாதீரத்தன்', மாதீர்த்தன்' என்ற பாடபேதங்களும் காட்டியுள்ளார்கள். ஆளுல், செய்யுளிலே பொய்கை, வாறு என்பனவற்றைச் சிறப்பித்துச் சொல்வதனை நோக்கினால், மாதீர்த்தன் என்பதுவே உண்மைப் பெயராதல் வேண்டும் என்பது விளங்கும். இப் பெயரையே யான் பதிப்பித்த சங்க இலக்கியத்தில் ஆண்டுள்ளேன். செய்யுளில் வரும் தொடர் முதலியவற்றை வைத்து ஆசிரியரைக் குறிப்பித்தல் பண்டைக்காளத்தின் ஒரு வழக்காடுயிருந்தது. தொகை நூல்களில் இவ்வழக்காற்றிற்குப் பல உதாரணங்கள் காட் டன் கூடும். கங்குல் வெள்ளத்தார், கல்பொரு பிறதுரை யார், பதடி வைகலார் என்பனவற்றைக் காண்க. இப்புலவர் செய்துள்ளதாகத் தொகை நூல்களில் காணப்படுவது குறுந்தொகையில் வந்துள்ள யுளே யாகும். அது வருமாறு: ஒரு செய் ஊர்க்கும் அணித்தே பொய்கை; பொய்கைக்குச் சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே ; இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும் துன்னல் போகின்றாற் பொழிலே; யாம்எம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/127&oldid=1481727" இலிருந்து மீள்விக்கப்பட்டது