பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிறுகதை தமிழ் நாட்டில் தெருவில் நிர்வாணமாய் வர மட்டும் வெட்கப்படுகிறார்கள், நானும் ஒரு சிறு கதை எழுத் தாளனாக்கும் என்று சொல்லிக்கொள்ள மட்டும் சிலர் வெட்கப்படுவதில்லை என்று ஒரு பிரபல எழுத்தாளர் சொன்னார்.

அவர் சொன்னதில் ஓரளவு உண்மை இருக்கிறது என்பது என் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் காரணமாக எழுந்ததே இக் குறிப்புகள்.

தமிழ் நாட்டில் இன்று சிறு கதைகள்தான் பத்திரிகை களின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருக்கின்றன. தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்திலும் இன்று சிறு கதை ஒரு முக்கிய அம்சமாகி விட்டது.

தமிழர் சமூகமும் இன்று கதைகளையே மிகவும் விரும்புகிறது. மேலும் இந்த அவசர யுகத்தில் சுருங்கிய பக்கங்களில், ருசியான விஷயம் தரவேண்டுமென்றால் பத்திரிகை ஆசிரியர்களுக்குச் சிறுகதையைப் போல, வேறொரு அம்சம் கிடைக்காது. அதனால், இன்று பத்திரிகை ஆசிரியர்களுக்குச் சிறு கதை மோகம் இருக்கிறது. இவர் களின் மோகத்தைத் தணிப்பதற்காக, இன்றைய எழுத் தாளர்களுக்கும் சிறு கதை மோகம் இருக்கிறது. இவை 87