பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

11

என்பது. பம்பாயிலும் கல்கத்தாவிலும் டில்லியிலும் இன்னும் தமிழ் நாட்டிற்குள் சென்ற சென்ற இடங்களிலெல்லாம் இதை நான் சொன்னதுண்டு. மற்ற இடங்களில் வசிக்கும் தமிழர்களிடம் தமிழ் அன்பு இல்லாமலில்லை. ஆனால் சில இடங்களில் உள்ள தமிழர்கள் தங்கள் தமிழ் அன்பை ஒளித்து வைத்துக்கொள்கிறார்கள். துப்பறியும் நிபுணர்களைக் கொண்டு அதைக் கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. இன்னும் சில இடங்களில் வெடி மருந்து வைத்துப் பாறையைப் பிளந்தால் தமிழன்பு சிறு ஊற்றாக மேலே வருகிறது. இன்னும் சில இடங்களில் தமிழ் அன்பு வேறு பாஷைகளின் மீது துவேஷமாகப் பரிணமித்துக் கோர தாண்டவம் செய்கிறது. ஆனால் யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணத் தமிழர்கள் உள்ள இடங்களிலும் தமிழ் அன்பு வெளிப்படையாக அதனுடைய இனிமையான வடிவத்தில் பொங்கிப் பெருகுவதைக் காணலாம்.

இப்படியாகப் பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததைக் கொண்டே சொல்லிவந்தேன். திடீரென்று சில நாளைக்கு முன் ஐயப்பாடு தோன்றி விட்டது. பத்து ஆண்டுகளுக்குள் உலகத்தில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்து விடுகின்றன. வாழ்க்கையிலும் பல மாறுதல்களைக் காண்கிறோம். பன்னிரண்டு வருஷத்துக்குள் புதுப்பிக்காவிட்டால் பதிவு செய்த பத்திரம்கூடக் ‘காலாவதி’ ஆகி விடுவதாகக் கேள்விப் பட்டிருக்கிறோம். அப்படியிருக்க யாழ்ப்பாணத்தாரின் தமிழ் அன்பு மட்டும் ஒரு மாமாங்கம் ஆகியும் அப்படியே நிலைத்திருக்கும் என்பது என்ன நிச்சயம்? மறுபடியும் ஒரு தடவை போய்ப் பார்த்து விட்டு வந்தாலன்றி அதைப் பற்றி இனிக் கூட்டங்களில் சொல்லக்கூடாது. ஆனால் தமிழ்க் கூட்டங்-