பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

இலங்கையில் ஒரு வாரம்

2

ன் நண்பர் ஒருவரிடம் ஒரு சமயம் ஒரு பழைய கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். “1935-ம் வருஷத்தில் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தி வந்திருந்தார். அச்சமயம் நானும் அவ்விடம் போயிருந்தேன்.......” என்று சொல்லத் தொடங்கினேன்.

உடனே நண்பர் குறுக்கிட்டு, “எந்த வருஷத்தில் போனீர்கள்? 1935-லா 1936-லா?” என்று கேட்டார்.

“1935-ல் தான்!” என்றேன். “எந்த மாதத்தில்?” என்றார்.

“நன்றாய் ஞாபகம் இல்லை. ஆகஸ்டு மாதமாயிருக்கலாம்.”

“ஒரு வருஷம் ஆகஸ்டில் பெரு மழை பெய்தது. அந்த வருஷமா?”

“இருக்கலாம்.”

“எந்த ஊருக்குப் போனீர்கள் ? திருச்செங்கோட்டுக்கா?”

“ஆமாம்.”

“திருச்செங்கோட்டுக்குப் போக எந்த ஸ்டேஷனுக்கு டிக்கெட் வாங்கினீர்கள்!”

“சங்கரிதுர்க்கம் ஸ்டேஷனுக்கு!”

“அப்போதெல்லாம் ரயிலில் நீங்கள் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்வது வழக்கமா? இரண்டாம் வகுப்பிலா?”

“கிடைத்த வகுப்பில்!”

“சென்னையிலிருந்து சங்கரிதுர்க்கத்துக்கு டிக்கெட் விகிதம் என்ன ?”

“சுமார்.......”