கல்கி
15
“சுமாராகத்தான் தெரியுமோ? நிச்சயமாய் தெரியாதாக்கும்?”
“தெரியாது.”
“உங்கள் காதில் தொளை போட்ட அடையாளம் இருக்கிறதே! அப்போதெல்லாம் கடுக்கன் போட்டுக் கொள்வதுண்டோ?”
“இல்லை.”
“அப்படித்தான் நினைத்தேன். ஏனென்றால் காதில் கடுக்கனோடு போனால் மகாத்மா கடுக்கனைக் கழற்றிக் கொடு என்று கேட்டுவிடலாம் அல்லவா? அதிருக்கட்டும்; யாரோ இங்கிலாந்தில் ஒரு வெள்ளைக்காரன் காதைக் குத்திக் கடுக்கன் போட்டால் கண்ணுக்கு நல்லது என்று சொல்லியிருக்கிறானாமே? அதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?”
“சாதகமான அபிப்பிராயந்தான். காதைக் குத்தினால் கண்ணுக்கு நல்லது. கண்ணைக் குத்திக் கொண்டால் காதுக்கு ரொம்ப நல்லது .......”
“அப்படித்தான் நானும் நினைத்தேன். இப்போதெல்லாம் வைரத்தின் விலை எப்படியிருக்கிறது. அதிகமா? குறைவா?”
மேற்படி நண்பரிடம் நான் சொல்ல ஆரம்பித்த விஷயத்தைச் சொல்லவே இல்லை! சொல்ல முடியவில்லை.
இலங்கைக்கு எந்தக் காரிய நிமித்தமாகவாவது போக விரும்பும் நண்பர்கள் ஆகாச விமான நிலையத்தில் சுகாதார அதிகாரிகளிடமும் சுங்கப் பரிசோதனை அதிகாரிகளிடமும் மேற்கண்டவாறு பலகேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராயிருக்க வேண்டும்.