பக்கம்:இல்லற நெறி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 187

மயக்கமும், வாந்தியும் உண்டாகின்றன. சிலருக்கு இவை முதல் நான்கு மாதம் வரை நீடிப்பதுண்டு, முதல் மூன்று மாதங்களில் அதிக உமிழ் நீர்ப் பெருக்கம், பல உணவுப் பொருள்களைத் தின்ன வேண்டும் என்ற அவா, கருப்பையின் வளர்ச்சி சிறு நீர்ப்பையை அமுக்குவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்ச்சி தோன்றுதல், கொங்கை களின் பெருக்கம், நான்காவது மாதத்தில் சிசுவின் அசைவு முதலியவற்ருல் ஒரு பெண் கருப்பமுற்றியிருப்பதைத் தானுக அறிந்துகொள்ள முடிகின்றது.

மருத்துவர் சோதனைகள்: மருத்துவர் பலவிதமாக ஒரு பெண் கருப்பிணியா இல்லையா என்பதைச் சோதித்து அறி கின்ருர் ஒரு சிலவற்றை மட்டிலும் ஈண்டு கூறுகின்றேன்: சிசு அசைவினைக்கொண்டு இதை அறுதியிடுகின்ருர்: சிக அசையாதிருப்பின் கருப்பிணியின் வயிற்றுத் தசையை இலே சாகச் சுண்டிவிடுவார். இவ்வாறு செய்தால் இக சின மடைந்துவிட்டதுபோல் வேகமாக வயிற்றிற்குள் மோதிக் கொண்டு புறளத் துவங்கும். நான்காவது மாதத்திற்குமேல் கருப்பிணியின் வயிற்றின்மீது தமது ஸ்டெதாஸ்கோப்என்னும் கருவியை வைத்துக் கேட்டால், சிசுவின் இதயம் துடிப்பது தெரியும், கருவில் வளரும் குழந்தையின் இதயம் நிமிடமொன்றுக்கு 130லிருந்து 150 தடவைகள் வரை துடிக் கின்றது. இது தாயின் இதயத் துடிப்புக்கு இரு மடங்காகும். சிசுவின் துடிப்பினை முதன் முதலாக 1818-இல் தான் கண் டறிந்ததாகத் தெரிகின்றது. புதிர்க்கதிர்ச் சோதனையில் கருப்பையிலிருப்பது சிசுவா அல்லது கட்டியா, ஒற்றைக் குழந்தையா அல்லது இரட்டையா, குழந்தை தலைகீழாக உள்ளதா அல்லது அதன் ஆசனம் கீழாக இருக்கின்றதா, குழந்தை உயிருடன் இருக்கின்றதா அல்லது இறந்து விட்டகா, குழந்தையின் தலை இடுப்பெலும்புக் கட்டினுள் புகுந்து வெளிவர முடியுமா, நஞ்சுக்கொடி தவறன இடத் தில் வளரத் தொடங்கியுள்ளதா-என்பன போன்ற விவரங்

.புதிர்க் கதிர்-x-ray .41 تم. تمہ-,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/193&oldid=597962" இலிருந்து மீள்விக்கப்பட்டது