பக்கம்:இல்லற நெறி.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

இல்லற நெறி


வேலையே கிளர்ச்சியின் தீவிரத்தின் காரணமாக நீங்கிவிடுகின் றது; இப்பொழுதுதான் உச்சநிலை உணர்ச்சி ஏற்படுகின்றது. இச்சமயத்தில் பெண் பிறப்புறுப்பின் எல்லாச் சுரப்பிகளினு டையவும் தசைகளினுடையவுமான பலமான சுருக்கங்கள் நிகழ்கின்றன. கருப்பையின் அனைச்சவ்விலும் அதன் நுழை வாயிலிலும் சளிபோன்ற சுரப்புநீரின் அளவுவிரைவாக அதிக மாகி விந்தணுக்கள் எளிதாக செல்வதற்கேற்ற சூழ்நிலை ஏற் படுகின்றது. பெண்ணிடம் உச்சநிலை உணர்ச்சி ஏற்படுங்கால் ஆணும் வித்துவை வெளிப்படுத்தினால், இது புணர்ச்சியின் முழுநிறைவும் ஏற்படக் காரணமாய் விடுகின்றது: உச்ச நிலை உணர்ச்சிக்குப் பிறகு அமைதியும் ஒய்வும் ஏற்படுகின் றன. பெண்ணும் சிறிது நேரம் முழு மன நிறைவு பெற்ற வளாக வாளா இருக்கின்ருள். ஈண்டு காட்டப்பெற்றுள்ள பெண்குறியின் படத்தினை (படம்-52) உற்றுநோக்கி மேலே கறப்பெற்ற செயல்களை உளங்கொள்க.

மேற்கூறிய படிகளில் ஒரு பெண்ணிடம் உச்சநிலை உணர்ச்சி ஏற்படினும், இதில் ஏற்படும் எண்ணற்ற மாறு பாடுகள் கலந்த நிலையும் சாதாரணமானதாகவே கருதப் பெறுகின்றது. சில பெண்களிடம் சிறிது கிளர்ச்சி ஏற்பட்டா லும், சுரப்பிச்செயல் மிகத் தீவிரமாக நடைபெறுகின்றது; சிலரிடம் இச்செயலே ஏற்படுவதில்லை. மேலும், ஒருசில பெண் கள் ஒரே உச்சநிலை உணர்ச்சியை அடைகின்றனர்; மற்றவர் கள் ஒரு சிறிது நேரத்திற்குள் பல உச்சநிலை உணர்ச்சிகளை விரும்புகின்றனர்; அவற்றை அடையவும் செய்கின்றனர்.

ஒரு பெண்ணிடம் உச்சநிலை உணர்ச்சி மிகத் தீமிரமாக ஏற்படுங்கால்-இதில் பல்வேறு நிலைகள் உள்ளன-அவளது பிறப்புறுப்பகுதியில் ஒரே சமயத்தில் நான்கு தசை இயக் கங்கள் மூலமாக அது தெளிவாகவெளிப்படுகின்றது. அச்சம யத்தில் யோனிவாயிலிலும் யோனிலிங்கத்தின் அருகிலுள்ள சில தசைகளிலும், சிறுநீர்ப்புற வழியின் திறப்பிலும் மலவா யிலிலுள்ள சுருங்கும் தசைகளிலும், கருப்பையின் வாயிலி லுள்ள தசைகளிலும் தாள இயக்கத்திற்கொத்த சுருக்கங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/400&oldid=1285268" இலிருந்து மீள்விக்கப்பட்டது