412
இல்லற நெறி
35
அன்பார்ந்த செந்தில்வேலனுக்க:
நலன்: நலனேயாகுக.
இதுகாறும் பாலுறவு கொள்ளுவதில் சில யுக்தி முறை களையும், தம்பதிகள் இருவரும் திருப்திகரமான முறையில் இந்த உறவினைக் கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டெழுதினேன். இக் கடிதத்திலும் இதனைத் தொடர்ந்து எழுதும் ஒரு சில கடிதங்களிலும் ஒரு சில பால் பொருத்தக்கேட்டு வகைகளே விளக்குவேன். திருமணம் புத்து கொண்ட இளைஞர்களும், புரிந்து கொள்ளப்போகும் இளைஞர்களும் இவற்றை அறிந்து கொள்ளுதல் இன்றியமை பாதது. திருமணத்துக்குப் பிறகு எதிர்பாராதவகையில் ஒரு சில சங்கடங்கள் நேரிடுமாயின், அவற்றைக் குறித்துச் சிறிதும் அதிர்ச்சியடையாது எளிதில் தீர்வுகாண முயலலாம்: இதனுல் அவர்கள் திருமணத்தை வெற்றியுடையதாகச்செய் யலாம். சுருங்கக்கூறின் திருமண உறவாகிய? ஆழியில் எதிர்பாராத வகையில் காணும் மணல் திட்டுக்கள், கடற் பாறைகள், பேரலைகள், நீரோட்டங்கள் ஆகியவைப்பற்றி ஒரு கிறிது அறிந்து கொள்வார்களாயின், இல்வாழ்க்கையா கிய தெப்பத்தை நன்முறையில் கொண்டு செலுத்தலாம்.
பாலுறவின் முக்கியத்துவம்: மேற்கூறியவற்றிலிருந்து பால் பொருத்தக் கேடுகளினுல்தான் திருமணத்திற்குப் பின் தம்பதிகளிடையே பல சங்கடங்கள் எழுகின்றன என்று கருதுதல் வேண்டா. திருமண உறவுப் பொருத்தப்பாட் டில் எண்ணற்ற கூறுகள் பங்கு பெறுகின்றன. தம்பதிகளின்
1. urrá, Gurrð B så Gs@–Sexual disharmony. 2: &q5uper e-po-Matrimonys