பக்கம்:இல்லற நெறி.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 323

யரும் காதலால் இாண்டப்பெற்றுத் தன் தமக்கேற்றதுணைவர் களைத் தேடிக்கொண்டனர். இது பெரும் எலும் பிறர்க்குத் தெரியாமல் நடைபெற்று வந்தது. நாளடைவில் இதன அவர்கள் தங்கள் தோழன் அல்லது தோழியர்க்கு வெளிப் படுத்துவர் இதனை அறிந்த ஆன்னுர் அவர்தம் பெற்ருேருக் குக் குறிப்பாகக் கூறி மணம் முடிக்க முயல்வர். இருவர் பெற்ருேரும் கலந்து பேசி அக்காதலருக்கு மனம் முடிப்பர்: சில சமயம் பெற்ருேரே இக் காதலை அறிந்து மணம் முடிப்ப தும் உண்டு. காதல் மணம் நடைமுன்றயில் இன்மையால், பெரும்பாலும் அக் காதலர்க்கே மணவினை நடக்காது போவ துமுண்டு. இங்ங்ணம் ஒரு சில பெண்ணின் பெற்ருேரோ அல் லது மணமகனின் பெற்ருேரோ அக்காதற் கலப்பைத் தடுத் தாலும், அல்லது மணவினைக்குத் தடையாக இருந்தாலும், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி வேற்றுார்சென்கூ அங் குத் திருமணம் செய்துகொள்வர். சில சமயம் பெண்ணின் சுற்றத்தார் அவர்களைத் தேடிச்சென்று இருவரையும் அழைத்துவந்து திருமணம் செயத லும் உண்டு. இவ்வாறு நடக்கும் காதற் கலப்பில் பெரும்பாலும் உள்ளப்புணாச்சியே நடைபெறும். பலர் அறிய மணந்துகொண்ட பின்னரே மெய்யுறு புணர்ச்சி நிகழும். ஒரு சிலரிடம் மெய்யுறு புணர்ச்சி நிகழினும் நிகழலாம். சில சமயம் பெண்ணின் காமக் குறிப்பை அறிந்த பெற்ருேர் தம் மகள் துணைவனை நாடுகின்ருள் எனக் கருதி ஒத்த பருவமுள்ள வேருெரு வனுக்கு மணம் பேச முனைந்தால் அதையறிந்த அப்பெண் நேராகவோ அல்லது தோழி முதலியோர் மூலமாகவோ தன் கருத்தினைத் தன். பெற்ருேர்க்கு அறிவிப்பாள்; பெற்ருேரும் அவளை அவள் காதலனுக்கே மண முடிப்பதும் உண்டு.

சில பெண்கள் நாணம் மிக்கு தம் கருத்தை வெளியிடா மல் காமக்காய்ச்சலால் உண்ணுமலும் உறங்காமலும் உடல் வாடிப் பைத்தியம் பிடித்தவர் போலிருப்பர் அது கண்ட பெற்ருேர் அதன் காரணமறியாது மதிமயங்சிக் குறத்தி யிடம் குறி கேட்பர்; வெறியாட்டாளனை அல்லது உடுக்கை படிக்கும் பூசாரியை வினவி நோயின் காரணத்தை அறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/529&oldid=598712" இலிருந்து மீள்விக்கப்பட்டது