பக்கம்:இல்லற நெறி.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 55 I

45

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன் நலன் தெரிவிக்க.

இன்றைய மக்களின் வாழ்க்கையில் எத்தனையோ மாற் றங்கள் நடைபெற்றுள்ளன. படித்தவர்களின் வாழ்க்கை ஒரு விதமாகவும் பாமரர்களின் வாழ்க்கை மற்ருேரு வித மாகவும் அமைந்திருக்கின்றன. இன்று தமிழ் மக்களிடையே பெரும்பாலும் நடைபெற்று வரும் திருமணங்களை முன் கடிதத்தில் குறிப்பிட்ட பிரசாபத்தியம் என்ற திருமண வகையில் அடக்கலாம். மணமகன் வீட்டாரிடமிருந்து பரியம் வாங்குதலும், பெண் வீட்டார் பெண்ணுக்குச் சீரி முதலியவை கொடுத்தலும் இன்று வழக்கிலிருந்து வரு கின்றன. சில வகுப்பாரிடை பிற்குறிப்பிட்ட வழக்கம் வர தட்சினையாக மாறி இருக்கின்றது. அண்மையில் இக்கொடு மையான கேடு பயக்கும் பழக்கத்தைப் போக்குவதற்காக இயற்றப்பட்ட சட்டத்தாலும் குறிப்பிடத்தக்க நன்மை யொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. இதல்ை வரதட் கிணைப்பேய் அன்பளிப்புத் தேவதை'யாக மாறியுள்ளது! அவ்வளவுதான்.

நாகரிக வாழ்வின் விளைவுகள்: இன்றைய நாகரிக வாழ்க் கையில் விரைவாக ஏற்பட்டுவரும் மாற்றங்கள் இன்னும் நம் நாட்டுப் பண்பாட்டுடன் நன்ருக இணையவில்லை. கல்வி மக்களிடையே வேகமாக வளர்ந்து வருகின்றது. பெண் களும் அதிகமாகப் படிக்கத் தொடங்கியுள்ளனா அவர்கள் அரசியல் அலுவல்களிலும் பிற அலுவல்களிலும் பணியாற்று கின்றனர். ஒரளவு விரைவாக வளர்ந்துவரும் தொழில் முன்னேற்றத்தாலும் மக்கள் வாழ்க்கை மாறி வருகின்றது. பெரும்பாலும் படித்தவர்களும் அலுவல் பார்க்கின்ருேரும் நகர்புறத்தை நாடிக் குடியேறி வருகின்றனர். இத்தகைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/537&oldid=598730" இலிருந்து மீள்விக்கப்பட்டது