பக்கம்:இல்லற நெறி.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 665

நன்ருக மனத்தில் இருத்துதல் வேண்டும். நல்ல உணவு. நல்ல உடை, போதுமான பாதுகாப்பு, இன்றியமையாத அளவு கல்வி முதலியவற்றைப் பருவத்தில் அளித்தால்தான் அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த இளைஞர்களாக வளர்ந்து உயர்ந்த குடிமக்களாகத் திகழ்வர் என்பதை நீ நன்கு உணர வேண்டும்,

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.:

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்ருேன் எனக்கேட்ட தாய். 9

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.41

என்றகுறள் மணிகளின் அறிவொளியை நோக்குவாய நிலத்தை நன்கு உழுது நல்ல விதைகளை ஊன்றினுல் நல் விளைவினைப் அடையுமாப்போலே பெற்ருேர் தம் குழவிகட்கு வாழ்க்கையில் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தருதல் வேண்டும்; வாய்ப்புகளை அமைத்து வழிகாட்ட வேண்டும்: நல்ல குடும்ப வாழ்க்கை ஒரு குழத்தையின் இருப்பு முதல்’ ஆகும். இன்பம் ததும்பியோடும் குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளும், அன்பு இணக்கம் ஆதரவு முதலிய பண்பு கள் நிலவும் குடும்பங்களிலிருந்து வரும் குழவிகளும் எதிர் காலத்தில் தாம் தம்முடைய திருமணங்களைச் சிறந்த முறை யில் அமைத்துக் கொள்வார்கள் என்பது ஒரு தலை. ஆகவே, நல்ல தாய்தந்தையர் ஆவதற்கு நல்ல திருமணம் அடிப் படையாக அமைகின்றது என்பதை ஒவ்வொரு மணமக் களும் நன்கு உளங்கொள்ளல் வேண்டும். -

89. குறள்-37, 40. குறள்-69 4 i , . " 68, 42. இருப்பு முதல்-Asset.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/571&oldid=598806" இலிருந்து மீள்விக்கப்பட்டது