களவியற் காரிகை
(608) “கேளாய் வாழியோ மகளைநின் றோழி திருநகர் வரைப்பகம் புலம்ப அவனொடு பெருமலை இறந்தது 'நோவ னோவல் கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி முடங்குதா ளுகைத்த 'பொலங்கெழு பூழி பெரும்புலர் விடியல் விரிந்துவெயி லெறிப்பக் கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல்
சிறுபுன் பெடையொடு குடையு மாங்கண் அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக்
கன்றுகா ணாதுபுன் கண்ணசெவி சாய்த்து மன்றுநிறை பைதல் கூரப் பலவுடன் கறவை தந்த 'கடுங்கண் மறவர் கல்லென் சீறூர் 4எல்லியின் அசைஇ முதுவாய்ப் பெண்டின் செதுகாற் குரம்பை மடமயி லன்னவென் னடைமெலி பேதை தோட்டுணை யாகத் துயிற்றத் துஞ்சாள் வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கட்
5
சேக்கோ ளறையுந் தண்ணுமை
கேட்குநள் கொல்லெனக் கலுழுமென் நெஞ்சே
99
185
-நெடுந்தொகை 63.
12. பின்செல வலித்தல் என்பது தலைமகளின் ளமை நினைந்து வருந்திய தாய்க்கு நீ கவன்று மெலிய வேண்ட ா. யான் அவள் புக்க விடம் புக்குத் தேடுவேன் எனச் செவிலி பின் செல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:
(609) "வேயின தோளி மெலியல்விண்
ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப்
பாயின சீர்த்தியன் அம்பலத்
தானைப் பழித்துமும்மைத்
தீயின தாற்றல் சிரங்கண்
ணிழந்து திசைதிசைதாம்
போயின எல்லையெல் லாம்புக்கு
6
நாடுவன் பொன்னினையே'
-திருக்கோவையார் 234.
1.
நோவே. 2. புலங்கெழு. 3. கடுங்கால். 4. எல்லினசைஇ. 5. நடைமலி.