களவியற் காரிகை
(614) “காய்ந்திலை மறவை மன்னோ வேந்திழை அழல்கெழு வெஞ்சுரஞ் செலவும்
எழில்கெழு பாவை ஏந்திய குரவே"
(615) “தான்றாயாக் கோங்கம் தளர்ந்து முலைகொடுப்ப வீன்றாய்நீ பாவை யிருங்குரவே-யீன்றாண்
மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற வழிகாட்டாய் ஈதென்று வந்து”
187
பொருளியல் 123.
-திணைமாலை நூற்றைம்பது 65.
ம்
14. புறவொடுரைத்தல் என்பது தலைவியைத் தேடிச் செல்லும் செவிலி ஆங்குக் கண்ட புறாவினிடம் ஆற்றாமை உரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு:
(616) “புயலன் றலர்சடை ஏற்றவன்
தில்லைப் பொருப்பரசி
பயலன் றனைப்பணி யாதவர்
போல்மிகு பாவஞ்செய்தேற்
கயலன் தமியன்அஞ் சொற்றுணை வெஞ்சுரம் மாதர்சென்றால் இயலன் றெனக்கிற் றிலைமற்று வாழி எழிற்புறவே"
-திருக்கோவையார் 240.
15. அடிச்சுவடு உரைத்தல் என்பது குரவையும், புறவையும் கண்டு வருந்திச் செல்லும் செவிலி தலைவியின் அடிச்சுவடு நிலத்திற் பதிந்திருக்கக் கண்டு வருந்திக் கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:
(617) "தெள்வன் புனற்சென்னி யோன்அம்
பலஞ்சிந்தி யாரினஞ்சேர்
முள்வன் பரல்முரம் பத்தின்முன்
செய்வினை யேனெடுத்த
ஒள்வன் படைக்கண்ணி சீறடி
யிங்கிவை யுங்குவையக்
கள்வன் பகட்டுர வோனடி
யென்று கருதுவனே"