118
766
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
“கடிமலர் ஏந்திக் கதழ்ந்திறைஞ்சி”
என்பது நேரீற்று நாலசைச்சீரோடு ஒன்றாமையின், கலித்தளை. 2‘“மந்தமாருதம் மருங்கசைப்ப”
என்பதும்,
366
“அந்தரந்துந்துபி நின்றியம்ப”
என்பதும் நிரையீற்று நாலசைப் பொதுச்சீர் நின்று வரும் சீரின் முதல் அசையோடு ஒன்றியும் ஒன்றாதும் வந்த வஞ்சித்தளை.
66
இலங்குசாமரை யெழுந்தலமர
என்பது நிரையீற்று நாலசைப் பொதுச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றிய வஞ்சித்தளை.
(வஞ்சி விருத்தம்)
"உரிமை யின்கண் இன்மையால்
அரிமதர் மழைக் கண்ணாள்
செருமதி செய் தீமையால்
பெருமை கொன்ற என்பவே”
யா. வி. 15. 94. மேற்.
―
யா. கா. 11 மேற்.
என்னும் இதனுள் ‘மழை' என்னும் அசைச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றாமையின், வெண்டளை ; ‘செய்' என்னும் அசைச்சீர் நின்று வரும் சீர் முதல் அசையோடு ஒன்றிற்று ஆகலின், ஆசிரியத்தளை. பிறவும் வந்துழிக் காண்க.
பிறரும் தளைக்கு இலக்கணம் இவ்வாறே எடுத்து ஓதினார். என்னை?
"இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் விகற்ப நடையது வெண்டளை ஆகும்
“உரிச்சீ ரதனுள் உரைத்ததை அன்றிக் கலக்கும் தளையெனக் கண்டிசி னோரே "இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் விகற்பம் இலவாய் விரவி நடப்பின் அதற்பெயர் ஆசிரி யத்தளை ஆகும்”
“வெண்சீர் இறுதிக் கிணையசை பின்வரக் கண்டன எல்லாம் கலித்தளை ஆகும்”
1. கருவிளந்தண்பூ. 2. தேமாந்தண்ணிழல். 3. கூவிளந்தண்ணிழல்.