யாப்பருங்கலம்
(கட்டளைக் கலித்துறை)
"தேமா புளிமா கருவிளம் கூவிளஞ் சீரகவற் காமாங் கடைகா யடையின் வெண் பாவிற்கந் தங்கனியா வாமாண் கலையல்குல் மாதே ! வகுத்தவஞ் சிக்குரிச்சீர் நாமாண் புரைத்த அசைச்சீர்க் குதாரணம் நாள்மலரே'
66
99
"தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழல் தந்துறழ்ந்தால் எண்ணிரு நாலசைச் சீர்வந்த தருகும்; இனியவற்றுட் கண்ணிய பூவினம் காய்ச்சீர் அனைய; கனியோடொக்கும் ஒண்ணிழற் சீர் ; அசைச் சீரியற் சீரொக்கும் ஒண்டளைக்கே’
இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.
117
-யா. கா. 7,8.
பிறரும்,
(நேரிசை வெண்பா)
"நேரிற நேர்வரின் வெண்டளை யாகுமந் நேரிற்ற சீர்ப்பின் நிரைவரின் - ஓரும்
கலித்தளையாம் பால்வகையால் வஞ்சித் தளையாம் நிரைவரினும் நாலசைச்சீர்க் கண்
எனவும்,
"உரிச்சீர்த் தளைவகைக் கெய்தும் பெயரே நிரைநேர் இறுதி நாலசைச் சீர்க்கண்”
எனவும்,
6
“ஓரசைப் பொதுச்சீர் தளைவகை தெரியின் ஈரசைச் சீர்த்தளைக் கெய்தும் பெயரே
எனவும்,
66
ஓரசைப் பொதுச்சீர் ஒன்றா தாயின்
வெண்டளை; ஒன்றிய தாசிரியத் தளையே” எனவும் சொன்னாரும் உளரெனக் கொள்க.
“அங்கண்வானத் தமரரரசரும்”
என்னும் பாட்டினுள்,
166
“வெங்களியானை வேல்வேந்தரும்
وو
- திருப்பாமாலை.
யா. வி. 13. மேற்.
யா. கா. 9. மேற்.
என நேரீற்று நாலசைச்சீர் நின்று, வரும் சீர் முதலசையோடு ஒன்றினமையின், வெண்டளை.
1. கூவிளந்தண்பூ.