154
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
ஒவ்வொரு பாவிற்கும் அடிச்சிறுமை
ஙுஉ. -ஈரடி வெண்பாச் சிறுமை; மூவடி
ஆசிரி யத்தொடு வஞ்சி; எஞ்சிய
தீரிரண் டடியே இழிபென மொழிப.
'என்பது என் நுதலிற்றோ?" எனின், நான்கு பாவிற்கும் சிறுமைக்கு எல்லையாகிய அடி வரையறை உணர்த்துதல் நுதலிற்று.
ஆ
இ.ள்) ஈரடி
வண்பாவிற்குச் சிறுமை; மூன்றடி சிரியப்பாவிற்கும், வஞ்சிப்பாவிற்கும் சிறுமை; ஒழிந்த கலிப்பாவிற்கும் நான்கடி சிறுமை என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
ஏகாரம், தேற்றேகாரம்.
66
'ஒருதொடை ஈரடி வெண்பாச் சிறுமை;
இருதொடை மூன்றாம் அடியின் இழிந்து வருவன ஆசிரியம் இல்லென மொழிப; வஞ்சியும் அப்பா வழக்கின ஆகும்
“நான்காம் அடியினும் மூன்றாம் தொடையினும் தாழ்ந்த கலிப்பாத் தழுவுதல் இலவே"
என்றார் காக்கைபாடினியார்.
என
அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:
(குறள் வெண்பா)
“தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல்?
யா. கா. 14. மேற்
―
யா. கா. 14. மேற்.
14.மேற்
—
திருக்குறள். 318
ரண்டடியால் வெண்பாவிற்குச் சிறுமை வந்தவாறு.
(நேரிசை ஆசிரியப்பா)
66
அவரோ வாரார் தான்வந் தன்றே
எழிற்றகை இளமுலை பொலியப்
பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே”
ஐங்குறு நூறு 347
எனவும்,
(நேரிசை ஆசிரியப்பா)
1“முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே 2மலையன் ஒள்வேற் கண்ணி
முலையினம் வாராள் முதுக்குறைந் தனளே”
சிற்றெட்டகம்.
யா. வி. 73. மேற்.
எனவும் மூன்றடியால் ஆசிரியப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு.
1. பேரறிவு உற்றனள். 2. மலையமான் திருமுடிக்காரி ; மலைநாட்டு வேந்தனுமாய்.